நாகை மீனவர்களை உடனடியாக மீட்டுத் தாருங்கள்... பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கடிதம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 20, 2021, 01:33 PM IST
நாகை மீனவர்களை உடனடியாக மீட்டுத் தாருங்கள்... பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கடிதம்...!

சுருக்கம்

காணாமல் போன 9 நாகை மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 9 பேர் இதுவரை கரை திரும்பவில்லை. டவ் - தே புயல் எச்சரியை அறிந்து கரை திரும்பிய மீனவர்களின் படகு புயல் சிக்கிய மூழ்கியதாக தகவல்கள் வெளியாகின.  நாகை சாமந்தான் கோட்டையச் சேர்ந்த மணிகண்டன், அவருடைய தந்தை இடும்பன், அண்ணன் மணிவேல், நாகூர் பட்டினச்சேரியைச் சேர்ந்த தினேஷ், இளஞ்செழியன் உள்ளிட்ட 9 மீனவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. 

இதனால் 9 மீனவர்களின் நிலை என்னவென்று அறியாமல் அவர்களுடைய குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.   மீனவர்களை மீட்டுத் தரக்கோரி அவருடைய குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை இயக்குநர் ஆகியோருக்கு கண்ணீர் மல்க மனு கொடுத்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் காணாமல் போன 9 நாகை மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

அதில், ஏப்.29-ம் தேதி அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகையைச் சேர்ந்த 9 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.  அந்த மீனவர்களின் படகு டவ்-தே புயலில் சிக்கியிருக்கலாம் என, அவர்களது குடும்பத்தினர் அஞ்சுவதாகவும், அவர்களுடைய பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 9 மீனவர்களையும் மீட்க பிரதமர் உடனடியாக இந்தியக் கடற்படை மற்றும் விமானப் படைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை