"கடிதம் கொடுத்துவிட்டோம்... ஆளுநர் அழைப்புக்காக காத்திருக்கிறேன்" - எடப்பாடி வெய்ட்டிங்...!!!

Asianet News Tamil  
Published : Feb 14, 2017, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
"கடிதம் கொடுத்துவிட்டோம்... ஆளுநர் அழைப்புக்காக காத்திருக்கிறேன்" - எடப்பாடி வெய்ட்டிங்...!!!

சுருக்கம்

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்த கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி உள்ளோம் அவர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம் என்று சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

ஹோட்டலில் இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் , சட்டமன்ற கட்சித்தலைவராக என்னை  முன்மொழிந்து அனைத்து சட்டபேரவை உறுப்பினர்களும் ஒரு மனதாக தேர்வு செய்தார்கள். 

அம்மா அரசை அமைப்பதற்கு ஆளுநரிடம் உரிமை கோரும் கட்டிதம் அனுப்பி உள்ளோம். அவர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம். சின்னம்ம்மா அனைத்து சட்டமன்ற குழு தலைவராக என்னை தேர்வு செய்துள்ளார்கள் . இவ்வாறு எடப்படி பழனிச்சாமி கூறினார். 

PREV
click me!

Recommended Stories

திமுக-விடம் மன்னிப்பு கேட்ட விஜய்! தவெக அமைச்சர் செய்த தவறு! நடந்தது என்ன?
1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!