
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான 18 நிறுவனங்களின் ரூ.1,430 கோடி கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.7 கோடி மதிப்புள்ள 16 வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் சுமார் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 5 நாட்களாக நடைபெற்ற இந்த வருமான வரித்துறையின் சோதனை இன்று தான் நிறைவடைந்தது. இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான 18 நிறுவனங்களின் ரூ.1,430 கோடி கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.7 கோடி மதிப்புள்ள 16 வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளன.