உங்களைப் போல துரோக அரசியல் அண்ணாமலைக்கு தெரியுமா.? வைகோவை மானாவாரியாக வாரிய பாஜக..!

By vinoth kumarFirst Published Nov 13, 2021, 3:17 PM IST
Highlights

இந்தப் பிரச்னையைப் பற்றி அகரம்கூட தெரியாத அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது என்று வைகோ காட்டமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் வைகோவின் இந்த பேச்சுக்கு, தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வைகோவை நம்பி திமுகவை விட்டு வெளியேறி உயிர் நீத்தவர்களுக்கு அவர் செய்த துரோகம் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு துரோக அரசியல் தெரியாது என பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக வைகோ ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில், அண்ணாமலைக்கு பதிலளித்த வைகோ அணை சம்பந்தப்பட்ட விவரங்களையும், அது தொடர்பாக தான் இதுவரை மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளையும் விரிவாக சொல்லி, ஒரு அறிக்கையாகவே வைகோ வெளியிட்டிருந்தார்.

அதில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்ட ஒன்றாகும்... அணையை உடைக்கலாம் என்று தற்போது கேரள அரசு திட்டம் வகுக்கிறது. அதனை எதிர்த்துத் தமிழக மக்கள் பொங்கி எழுவார்கள். பாஜவில் இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. இந்தப் பிரச்னையைப் பற்றி அகரம்கூட தெரியாத அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது என்று வைகோ காட்டமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் வைகோவின் இந்த பேச்சுக்கு, தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பாஜவில், இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது" : வைகோ.

மதிமுகவில், இப்போது வந்து சேர்ந்திருக்கின்ற துரை வைகோ, முதலில் வெறும் 'சிகரெட் கடை' வைத்து கொண்டிருந்தார். அவருக்கு வைகோவை நம்பி திமுகவை விட்டு வெளியேறி உயிர் நீத்தவர்களுக்கு அவர் செய்த துரோகம் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு துரோக அரசியல் தெரியாது. தமிழினத்தை கொன்று குவித்த திமுக.என்று கூறிவிட்டு ஒரு எம்பி பதவிக்காக அதே திமுகவிடம்  கட்சியை அடகு வைத்த கேவல அரசியல் வைக வுக்கு தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது.  

என்று கூறிவிட்டு ஒரு எம் பி பதவிக்காக அதே தி மு கவிடம் கட்சியை அடகு வைத்த கேவல அரசியல் வை கோ வுக்கு தெரியும்.ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது. 'வாரிசு அரசியல்' என்று ஸ்டாலினை விமர்சனம் செய்து விட்டு ஓட்டு அரசியலுக்காக எதிர்கால முதல்வரே என்று ஸ்டாலினை அழைத்த சந்தர்ப்பவாத (3/4)

— Narayanan Thirupathy (@Narayanan3)

 

'வாரிசு அரசியல்' என்று ஸ்டாலினை விமர்சனம் செய்து விட்டு ஓட்டு அரசியலுக்காக எதிர்கால முதல்வரே என்று ஸ்டாலினை அழைத்த  சந்தர்ப்பவாத அரசியல் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது.  வாயை மூடி மௌனம் காக்க வேண்டியது வைகோ தானேயன்றி அண்ணாமலை அல்ல. பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்யும் தகுதி, துரோக அரசியல் செய்யும் வைகோவுக்கு கிடையாது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

click me!