திமுக வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லிஜியன் என்ற குழுமம் இணையதளத்தை முடக்கியுள்ளது. அதில் நாட்டைக் காக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களு தடை விதிக்க வேண்டும் என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட தளத்தை மீட்க திமுகவினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்
இந்தச் சூழலில் நாட்டை காக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முரசொலி நாளிதழின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதால் இதன் பின்னணியில் பா.ஜ.க.வுக்கு எதிரான அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.