கொரோனாவை வைத்து திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திட்டம்.!! அமைச்சர் மபா. பாண்டியராஜன் குற்றச்சாட்டு.!!

By T BalamurukanFirst Published May 16, 2020, 9:58 AM IST
Highlights

கொரொனா வை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் திட்டமிடுகிறார் என்று அமைச்சர் மபா.பாண்டியராஜன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கொரொனா வை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் திட்டமிடுகிறார் என்று அமைச்சர் மபா.பாண்டியராஜன் குற்றம்சாட்டியிருக்கிறார்.


கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் ஏறியடித்துக்கொண்டு போகிறது. சீனாவையை மிஞ்சும் அளவிற்கு இந்தியாவில் பாதிப்பு அதிகமாகி கொண்டிருக்கிறது. நேற்றும் மட்டும் 103 பேரை காவு வாங்கியிருக்கிறது கொரோனா.
திமுக சார்பில் 'ஒன்றினைவோம் வா' என்கிற திட்டத்தை ஸ்டாலின் அறிவித்தார். இதனடிப்படையில் திமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிவாரணம் கேட்டு பெறப்பட்ட 1லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் ஒப்படைக்க சென்ற திமுக எம்பிக்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. 


இந்த நிலையில் தமிழக அமைச்சர்களில் ஒருவரான மபா. பாண்டியராஜன் திமுக கொரோனா வை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க திட்டமிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். திமுக ஆட்சி தமிழகத்தில் இருண்ட ஆட்சி இனி திமுக ஆட்சிக்கு வராது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார் அவர்.

click me!