திமுக விருப்ப மனு விநியோகம்... கால அவகாசத்தை நீட்டித்து துரைமுருகன் அறிவிப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 20, 2021, 02:37 PM IST
திமுக விருப்ப மனு விநியோகம்... கால அவகாசத்தை நீட்டித்து துரைமுருகன் அறிவிப்பு...!

சுருக்கம்

திமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான கால அவகாசத்தை வரும் 28-ம் தேதி வரை நீட்டித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் பிப்ரவரி 17 முதல் 24-ம் தேதி வரை சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கடந்த 15-ம் தேதி அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான கால அவகாசத்தை வரும் 28-ம் தேதி வரை நீட்டித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (பிப். 20) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"நடைபெறவிருக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுகவின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 17-2-2021 புதன்கிழமை முதல் 24-2-2021 புதன்கிழமை வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுமென ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, திமுக தலைவரிடம் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வேண்டுகோள் வைத்ததற்கிணங்க 28-2-2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம்:
பொதுத் தொகுதி - ரூ.25 ஆயிரம், மகளிருக்கும் மற்றும் தனித் தொகுதிக்கும் - ரூ.15 ஆயிரம் 

குறிப்பு: வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணிக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்பபடிவம் தலைமைக் கழகத்தில் ரூ.1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்" இவ்வாறு துரைமுருகன் அறிவித்துள்ளார்.


 

PREV
click me!

Recommended Stories

Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!