சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்து விவாதிக்க பாமக சிறப்பு பொதுக் குழு. களத்தில் குதித்த மருத்துவர் ராமதாஸ்.

By Ezhilarasan BabuFirst Published Feb 20, 2021, 1:57 PM IST
Highlights

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,  பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி இந்தக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.  

அனைத்து மாவட்டங்களிலும் வரும்  22-ஆம் தேதி  பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டங்கள் நடைபெறும் என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகள் நிலையிலான களப்பணிகள்  உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மறுநாள் (22.02.2021) காலை 11.00 மணிக்கு  பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்படவிருக்கின்றன. 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,  பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி இந்தக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. கட்சியின் மாநிலப் துணைப் பொதுச் செயலாளர்கள் நிலையிலான மாவட்ட வாரியாக இந்தக் கூட்டம் நடத்தப்படும். 2021- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதற்காக இதுவரை செய்துள்ள ஏற்பாடுகள், பணிகள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில்  விவாதிக்கப்படவுள்ளன. 

வாக்குச்சாவடிகள் நிலையில் களப்பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே ஆணையிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது. கூட்டத்தின் முடிவில் ஒவ்வொரு தொகுதியிலும் களப்பணிகளை மேற்கொள்ளவுள்ள, ஒருங்கிணைக்கவுள்ள நிர்வாகிகள், களப்பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!