கோமா நிலை..! செயற்கை சுவாசம்..! தீவிர சிகிச்சையில் திமுக பொதுச்செயலர்..!

By Manikandan S R SFirst Published Feb 28, 2020, 10:44 AM IST
Highlights

தொடர்ந்து மூன்று நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அன்பழகன் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அன்பழகன் கண்திறக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோமா நிலைக்கு சென்று விட்ட அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக பொதுச்செயலாளராக இருந்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். 98 வயதான அவர் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அன்பழகன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக இரவு 8 மணியளவில் அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 

இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்பழகன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்ததும் திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்தார்.

தொடர்ந்து மூன்று நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அன்பழகன் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அன்பழகன் கண்திறக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோமா நிலைக்கு சென்று விட்ட அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது திமுக தலைவர் ஸ்டாலின், தலைமைக்கழக நிர்வாகிகள் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் மரணம்..!

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தனது பிறந்தநாளுக்கு யாரும் வாழ்த்து தெரிவிக்க வர வேண்டாம் என ஸ்டாலின் நேற்று இரவு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் இன்று காலையில் குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார். நேற்று திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

பொதுச்செயலர் அன்பழகனின் உடல்நிலையும் திமுக எம்.எல்.ஏக்களின் அடுத்தடுத்த மரணமும் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த திமுகவையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

இரண்டு நாட்களில் எம்.எல்.ஏக்கள் தொடர் மரணம்..! அதிர்ச்சியில் உறைந்த திமுக..!

click me!