
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி என்கிற பேச்சே கூடாது என்று நிர்வாகிகளிடம் பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க –தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பா.ம.க களம் இறங்கியது. போட்டியிட்ட தொகுதிகளில் தருமபுரியில் அன்புமணி தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் பா.ம.க தோல்வியை தழுவியது. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து பா.ம.க. களம் இறங்கியது. ஒரு தொகுதியில் கூட பா.ம.க வேட்பாளர்களால் வெற்றி பெற முடியவில்லை.