தமிழ்நாட்டில் எல்லோருமே ஊழல்வாதிகள் !! ஆனால் தினகரன் மட்டும் நல்லவர் !! பாராட்டித் தள்ளிய சுப்ரமணியன் சாமி !!

Published : Apr 15, 2019, 11:56 PM IST
தமிழ்நாட்டில் எல்லோருமே ஊழல்வாதிகள் !! ஆனால் தினகரன் மட்டும் நல்லவர் !! பாராட்டித் தள்ளிய சுப்ரமணியன் சாமி !!

சுருக்கம்

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைவருமே ஊழல்வாதிகள் என்றும் டி.டி.வி.தினகரன மட்டுமே நல்லவர் என்று பாராட்டியிருக்கும் பாஜக எம்.பி சுப்ரமணியன்சாமி அமமுகவுக்கே ஓட்டு போட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் அதை செய்வோம், இதை செய்வோம் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த பிரச்சாரமும் நாளை மாலை 4 மணியுடன் முடிவடைகிறது. . இந்நிலையில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது சர்ச்சைக்குரிய கருத்துககளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் தமிழக மக்கள் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், விஸ்வ ஹிந்து பரிஷித்தில் உள்ள ஒரு தேசியவாதியாக தமிழகத்தின் தற்போதைய நிலையை நான் ஆய்வு செய்து பார்த்துள்ளேன். 

அதன்படி தமிழக மக்களே, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இந்த முறை ஓட்டு போடுங்கள். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் ஊழல் கட்சிகள். ஆனால் தினகரனின் அமமுக கட்சிக்கு தேசிய ஒற்றுமை உணர்வு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கண்ணோட்டத்தோடு இருக்கும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஓட்டுபோடுமாறு பாஜக மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமி, தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!