கொள்ளையடிப்பும்.. பொம்மலாட்டமும்.. இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ..?

 
Published : Jan 26, 2018, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
கொள்ளையடிப்பும்.. பொம்மலாட்டமும்.. இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ..?

சுருக்கம்

dhuraimurugan criticize admk government

மக்களை பற்றி கவலை கொள்ளாத தமிழக அரசு, இருக்கும் வரை எவ்வளவு சுருட்டலாம் என்பதிலேயே கவனம் செலுத்துவதாக திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக கருத்து தெரிவித்தார். அப்போது, பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்களும் மாணவர்களும் போராடிவருகின்றனர். ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைகொள்ளாத தமிழக அரசு, முடிந்தவரை சுருட்டுவதிலும் கொள்ளையடிப்பதிலுமே கவனமாக இருக்கிறது. 

ஜெயலலிதா இருந்தவரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அமைச்சர்கள், தற்போது என்ன செய்கிறோம் என்பது தெரியாத அளவிற்கு நடந்துகொள்கிறார்கள். டெல்லியில் இருந்துவரும் உத்தரவின்படி பொம்மலாட்டம் ஆடுகிறார்கள் என துரைமுருகன் விமர்சித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!