
ஜெயலலிதாவின் அண்ண்ண் மகளான தீபா தனது கணவர் மாதவனை வீட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் மீடியாக்கள் மூலம் வெளிச்சத்திற்கு தீபா. தொலைக்காட்சிகளில் பேட்டி அளிக்கும் போதும் சரி, ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த போதும் என, தீபாவின் அருகில் சாதுவாக இருந்தவர் அவரது கணவர் மாதவன்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனர் சரண்யா என்பவரும், செயலாளராக தீபாவின் கார் ஓட்டுநர் ஏ.வி.ராஜாவும், நியமிக்கப்பட்டனர். இது கணவர் மாதவனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தான் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு மட்டுமே கட்சிப் பதவிகளை அளிக்க வேண்டும் என்று தீபாவிடம் மாதவன் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
இதனால் வெறுப்பின் உச்சத்திற்குச் சென்ற தீபா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது தனது வேட்புமனுவில் கணவர் மாதவன் பெயரை குறிப்பிடவில்லை. இதனைத் தொடர்ந்து மாதவன் தனிக்கட்சி ஆரம்பித்து, கோவையில் கூட்டத்தையும் நடத்தினார்.
இதற்கிடையே நேற்று தியாகராய நகரில் இருக்கும் தீபாவின் வீட்டுக்கு வந்த மாதவன் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இருவரது ஆதரவாளர்களும் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மாதவனை வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றிய தீபா, மீண்டும் வீட்டுக்குள் வர வேண்டாம் என்று உத்தரவிட்டார்.