
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பல நோயாளிகள் மடியும் நிலை உருவானது. உலகமே காணாத பேரழிவாக கொரோனா வைரஸின் கோரதாண்டவம் வல்லரசு நாடுகளையே புரட்டிப்போட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு மீது பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டி வந்தன. கொரோனா தொற்று பரவலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும் கூட எதிர் கட்சி தலைவர்கள் பலரும் கூக்குரலிட்டனர். ஆனால் நாட்டின் இந்த இக்கட்டான சூழ்நிலையை கடந்த ஒரே வாரத்தில் மட்டும் மோடி அரசு எவ்வாறு கையாண்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் அவர்கள் முகத்தில் எல்லாம் கரிபூசும் விதமாக அமைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய கடந்த ஒரு வார அளவில் மட்டும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இவை அனைத்தையுமே மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரே வாரத்தில் செயல்படுத்தியுள்ளது. இதுவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உத்தரகாண்ட் வெள்ளத்தில் மக்கள் இறந்ததை மறக்க முடியுமா?, அப்போது நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற ஓட்டுநர்களுக்கு டீசலுக்குக் கூட பணம் கொடுக்கப்படவில்லை.
இன்று பாதுகாப்பு கவச உடைகள், மாஸ்க், வென்டிலேட்டர் ஆகியவை கடந்த ஆண்டை விட அதிக அளவில் கையிருப்பில் உள்ளது. இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தொற்று நோய் பரவல், இதனை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளே திண்டாடி வருகின்றன. சிலர் மோடியை எவ்வளவு விமர்சித்தாலும் வேறு எந்த தலைவராலும் இதுபோன்ற ஒரு தாக்குதலை கையாள முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
இதில் கசப்பான ஒரு உண்மை என்னவென்றால் கடந்த ஆண்டு மாநிலங்கள் தோறும் 162 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிதியும் வழங்கப்பட்டது. ஆனால் அதில் 33 ஆலைகள் மட்டுமே மாநிலங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளன. டெல்லி அரசு மத்திய அரசு அனுமதித்த 8 ஆக்ஸிஜன் ஆலைகளில் ஒன்றை மட்டுமே நிறுவியுள்ளது. இதில் யாரை குற்றம் சொல்ல வேண்டும்?. கட்டமைப்பிற்காக பணத்தை அனுப்பி வைத்த மத்திய அரசையா?, அதை பயன்படுத்த தெரியாத மாநில அரசுகளையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.