கொரோனாவால் கடைகள் அடைப்பு... டாஸ்மாக் கடைகளின் நிலவரம் என்ன..? மதுப்பிரியர்களே உஷார்..!

Published : May 05, 2021, 01:34 PM IST
கொரோனாவால் கடைகள் அடைப்பு... டாஸ்மாக் கடைகளின் நிலவரம் என்ன..? மதுப்பிரியர்களே உஷார்..!

சுருக்கம்

மாநில அரசின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை பற்றி குறிப்பாக எதுவும் சொல்லவில்லை.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருக்கிறது. நடப்பு மே மாதம் நோய்த்தொற்று புதிய உச்சம் தொடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இதையொட்டி வரும் 6ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து கடைகளும் நண்பகல் வரை மட்டுமே செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை தற்போது நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படுகிறது. அதாவது கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு கடந்த சில வாரங்களாக டாஸ்மாக் கடைகள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மூடப்படுகின்றன. இந்நிலையில் வரும் 6ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மேலும் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய டாஸ்மாக் அதிகாரி ஒருவர், ஒயின் ஷாப்கள் மூடப்பட வாய்ப்பில்லை. இவை கட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன. தமிழக அரசின் விதித்துள்ள புதிய உத்தரவின்படி, அரசு மற்றும் பொதுத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து விற்பனைக் கடைகளும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படவுள்ளது.

இதில் மாநில அரசின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை பற்றி குறிப்பாக எதுவும் சொல்லவில்லை. இதுதொடர்பாக தனியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாநில அரசு சார்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில் கொரோனா அதிகம் பரவும் பகுதிகள், கட்டுப்பாட்டு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அரசு மூட இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஏனெனில் இந்த கடைகளில் போதிய சரீர இடைவெளியை பின்பற்றுவதில்லை. இதனால் நோய்ப் பரவலுக்கு காரணமாக அமைந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் அரசுக்கு வருவாய் தேவை காரணமாக டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது 

PREV
click me!

Recommended Stories

மதுரையின் விஸ்வரூபம்..!சர்வதேச அந்தஸ்து வழங்கிய மத்திய அரசு - இபிஎஸ் வரவேற்பு..!
அமைச்சர் பதவி கிடைக்காது..! பி.டி.ஆரைத் தோற்கடிக்க ஸ்கெட்ச் போடும் தளபதி... திமுகவின் உள்ளடி அரசியல்..!