சீனாவுடன் காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம்- ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு... குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஜே.பி.நட்டா.!

Published : Jun 26, 2020, 11:27 AM ISTUpdated : Jun 26, 2020, 12:07 PM IST
சீனாவுடன் காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம்- ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு... குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஜே.பி.நட்டா.!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சி - சீனா இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியுள்ளதாக பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் கட்சி - சீனா இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியுள்ளதாக பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய நட்டா, ‘’கடந்த 2017 ம் ஆண்டில், டோக்லாமில் இந்தியா - சீனா படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டில்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். தற்போது, கல்வானில் நடந்த மோதலின் போதும் நாட்டை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது.

கடந்த 2005 - 06 ம் ஆண்டில் சீனாவும், சீன தூதரகமும், ராஜிவ் அறக்கட்டளைக்கு 300 ஆயிரம் அமெரிக்க டாலர் நிதி வழங்கியுள்ளது. இதுதான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையே ரகசிய ஒப்பந்தம்’’ என அவட் தெரிவித்தார். சீனா - இந்தியா எல்லையில் போர்ப்பதற்றம் சூழந்துள்ள நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை ராகுல்காந்தி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் சீனாவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ஜே.பி.நட்டா குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!