சீமான் ஒரு பாஜக அடிவருடி…. போட்டு தாக்கிய எம்.பி. ஜோதிமணி…

By manimegalai aFirst Published Oct 11, 2021, 8:03 PM IST
Highlights

சீமான் ஒரு பாஜக அடிவருடி என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.

சீமான் ஒரு பாஜக அடிவருடி என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், அரசியல் கட்சிகளின் தலைவர்களை பற்றி அவதூறாகவும், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம் மற்றும் அதில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: சீமான் ஒரு பாஜக அடிவருடி. பாஜக இம்மாதியான பயங்கரமான குற்றச்செயல்களில் இருந்து தங்களை காப்பாற்றும் என்கிற தைரியத்தில்தான் இப்படி பேசுகிறார்கள். இதற்கு தமிழ்மண்ணில் நாம் இடம் தரக்கூடாது.

நாம் தமிழரின் இந்த பேச்சு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றம்.தமிழகத்தின் அமைதியும்,அப்பாவி இளைஞர்களின் எதிர்காலமும் நாசமாகிவிடும்.

தமிழ்நாட்டின் அமைதியான எதிர்காலத்தில்  ஒருதுளிகூட சமரசம் செய்து கொள்ளக்கூடாது.தமிழக அரசு கடிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் சாட்டை துரைமுருகன் பேசிய காணொளியையும் வெளியிட்டு உள்ளார்.

click me!