
அதிமுகவில் இரு அணிகள் பிளவு ஏற்பட்ட பின்னர் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா என இரு அணிகள் செயல்படுகிறது.
முன்னதாக ஓ.பி.எஸ். அணியினர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று, சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இருதரப்பினரிடம் உள்ள எம்எல்ஏக்களின் ஆதரவை அறிந்து, கடந்த 16ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முறையிட்டனர். அதன்படி கடந்த மாதம் 18ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
அப்போது, ரசிகய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். அதனை, சபாநாயகர் தனபால், ஏற்கவில்லை. இதனால், சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து சட்டமன்ற பாதுகாவலர்களால், ஸ்டாலின் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அப்போது, அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சட்டமன்ற செயலாளர், கவர்னர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தார். அப்போது, சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறினார். மேலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டம் கூடியது. அதில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, முன் மொழிந்தார். அப்போது, சபாநாயகர் தனபால் பதவியில் இருந்து நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது.