நடிகை கஸ்தூரி மீது போலீசில் புகார்!

Asianet News Tamil  
Published : Mar 05, 2018, 12:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
நடிகை கஸ்தூரி மீது போலீசில் புகார்!

சுருக்கம்

Complaint against Kasturi in police station

நடிகை கஸ்தூரி, சாதி கலவரத்தை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரி, அண்மை காலமாக டுவிட்டரில் அனைத்து விஷயங்கள் குறித்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சினிமா, அரசியல், சமூக சார்ந்த விஷயங்கள் குறித்து நடிகை கஸ்தூரி, தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.

அவரின் டுவிட்டர் பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பு எழுந்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் சிலருடன் நடிகை கஸ்தூரி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் உண்டு. சிலர் அவருக்கு போன் செய்து மிரட்டுவதாகவும் கஸ்தூரி புகார் கூறியும் இருந்தார்.

நடிகை ஸ்ரீதேவி மறைவின்போது, தொலைக்காட்சிகளில் ஸ்ரீதேவி நடித்த பாடல் காட்சிகள், திரைப்படக் காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில், நடிகை சன்னி லியோன் மறைந்தால் எந்தமாதிரியான காட்சிகள் ஒலிபரப்புவார்கள் என்று டுவிட்டரில் கேட்டிருந்தார். 

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கஸ்தூரி மீது, சமூக நீதி சத்ரிய பேரவையின் தலைவர் பொன்குமார் புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை கஸ்தூரி, சாதி கலவரத்தை தூண்டும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிடுவதாக அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!