செந்தில்பாலாஜி பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டி! சீமான் செய்தது வேண்டாத வேலை! : யார், யார் சொன்னது?

First Published Mar 5, 2018, 12:26 PM IST
Highlights
yesterday political breaking and pit news


உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே. 
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி. 

*    முதல்வர் எடப்பாடி எங்களிடம் ‘பிரதமர் சந்திக்க மறுக்கிறார். வேண்டுமெனில் அந்த துறையின் அமைச்சரை சந்தியுங்கள் என எங்களுக்கு தகவல் வந்துள்ளது. என்ன செய்யலாம்?’ என கேட்டார்.
-    ஸ்டாலின்

*    ஸ்ரீதேவியின் சுயசரிதையை நான் படமாக்குகிறேன் என்று சொல்வதில் உண்மை இல்லை. அது முட்டாள்தனமானது. ஸ்ரீதேவி போல் நடிக்க இங்கு யாருக்குமே தகுதியில்லை.
-    ராம்கோபால் வர்மா

*    காவிரி விஷயத்தில் தீர்ப்பு வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகிறது. இன்னும் நான்கு வாரங்கள் உள்ளது. எனவே அவசரப்பட்டு இப்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. 
-    ஜெயக்குமார்

*    எங்களோடு முன்பு கூட்டணியில் இருந்துவிட்டு, இப்போது எங்களை மதவாத கட்சி என தி.மு.க. சொல்வதை மக்கள் நம்பமாட்டார்கள். 
-    பொன்.ராதாகிருஷ்ணன். 

*    பாரம்பரியமாக மதவாதத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி இப்போது அந்த கொள்கையை முன்னெடுக்கவில்லை. இது குஜராத் உள்ளிட்ட தேர்தல்களில் பிரதிபலித்தது. 
-    பினராயி விஜயன்

*    முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும், பழனியப்பனும், பிள்ளை பிடிப்பவர்கள் போல, ஆளுங்கட்சிக்கு எம்.எல்.ஏ.க்களை பிடிக்க அலைகின்றனர். 
-    தங்கமணி

*    கமலை வீட்டிற்கே சென்று சீமான் சந்தித்ததில் எனக்கு உடன்பாடில்லை. சீமான் வீட்டுக்கு கமல் வந்திருந்தால் அவரை வரவேற்றிருக்கலாம். பலரை சந்தித்த கமலை நேரில் சென்று இவர் வாழ்த்த வேண்டிய அவசியமில்லை.
-    வியனரசு

*    காவிரி நீர் விவகாரத்தில் தமிழர்களின் கோரிக்கையை கேட்பதற்கு மோடிக்கு விருப்பமில்லை. காரணம், கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே இப்படி நடந்து கொள்கிறார். 
-    வைகோ

*    மக்கள் பிரச்னைகளை தமிழக அரசு தீர்ப்பதில்லை. வெள்ளம், வறட்சி, புயல் போன்றவற்றில் தமிழகம் பாதிக்கப்பட்ட போது மத்திய அரசிடம் இருந்து அதற்கான சரியான நிவாரண நிதியை தமிழக அரசால் பெற முடியவில்லை. 
-    முத்தரசன்

*    பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணிக்கு தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு அதிக நிதி, கூடுதல் திட்டங்களை பெற முடியும். தினகரனும், அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டும். 
-    ராமதாஸ் அத்வாலே

*    அரசியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நரசரி மாணவர் தான். அவரது செயல்பாடுகள் அப்படித்தான் உள்ளன. அமித்ஷா முதுநிலை பட்டம் முடித்த மாணவர்.
-    ஹிமந்தா பிஸ்வா. 
 

click me!