கட்டண வசூல்... தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Jul 30, 2021, 3:24 PM IST
Highlights

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சேர்க்கையை உயர்த்தி, கல்வி தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரிய சங்கங்களை முறைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம். கடைசி தவணையை 2022 பிப்ரவரி 1ம் தேதிக்குள் வசூலிக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சேர்க்கையை உயர்த்தி, கல்வி தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரிய சங்கங்களை முறைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா ஊரடங்கால் பலரும் அவதியுற்று வரும் நிலையில், பெற்றோர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு  கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த அவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ‘நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீதம் கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம். வருமானம் பாதிக்கப்படாதவர்கள் 85 சதவீதத்தில் இருந்து முதல் தவணையை செலுத்த வேண்டும். மற்ற தவணைகளை 2022 பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் தொடர முடியாத மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு ஆர்.டி.ஈ  சட்டத்தில் நிரப்பப்படாத இடங்களை ஒதுக்க அரசு பரிசீலிக்கலாம். வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் 75 சதவீதம் செலுத்த வேண்டும். மற்ற தவணைகளை 2022 பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். 

வருமானம் இல்லாதவர்கள் கட்டணக் குறைப்பு கேட்டு பள்ளியை நாடலாம். கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக ஆன்லைன் கல்வி பெறுவது அல்லது பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தக்கூடாது. புகார் வந்தால் தீவிரமாக ஆராய்ந்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று நீதிபதி கிருஷ்ண குமார் உத்தரவிட்டார்.

இதற்கு பதிலளித்த தனியார் பளிகள், ’’கட்டண சலுகை குறித்து பரிசீலிக்கப்படும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் நீக்கப்படமாட்டார்கள்’’ என கூறினர். இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

click me!