5 ஆண்டுகாலமும் இதுபோலத்தான் பணி செய்வோம்… உறுதி அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! | CMStalin

Published : Nov 22, 2021, 08:51 PM IST
5 ஆண்டுகாலமும் இதுபோலத்தான் பணி செய்வோம்… உறுதி அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! | CMStalin

சுருக்கம்

#CMStalin | திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் ரூ.587.91 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.89.73 கோடி செலவில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் 23 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்குகினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தான் பணியாற்றி வருவதாகவும் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் திமுக அரசு பணியாற்றி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கோவையில் கடந்த பத்து ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலைய விரிவாக்க பணிக்கு ரூ.1131 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகராட்சி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்கு முக்கியத்துவன் அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆட்சி காலத்தில் திட்ட சாலை பணிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், மீண்டும் திட்ட சாலைகள் மேம்படுத்த உதவி செய்யப்படும் என்றும் மாநகரில் உள்ள சிறைசாலை புறநகருக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் காந்திபுரத்தில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். பின்னர் திருப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். மேலும் சுமார் 56 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலமாக ரூ.41 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கொழுமங்குழி ஊராட்சி மன்ற கட்டிடம், மாம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.56கோடியே 29 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

பின்னர் பேசிய அவர், அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கான அரசாக திமுக அரசு இருக்கும் என்றும் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பதை திருப்பூர் மக்களிடம் காண்பதாகவும் தெரிவித்தார். மேலும் நம்பர் 1 முதலமைச்சர் என்பது தனக்கு பெருமையல்ல; நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை என்று கூறிய அவர், ஆட்சிக்கு வந்து 6 மாதம்தான் ஆகிறது என்றும் அதற்குள் இவ்வளவு செய்துள்ளோம்; இன்னும் நான்கரை ஆண்டுகளில் என்ன செய்யவுள்ளோம் என எண்ணிப் பாருங்கள், 5 மாதம் அல்ல 5 ஆண்டுகாலமும் இதுபோலத்தான் பணி செய்வோம் என்று குறிப்பிட்டார். திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி என்பதுதான்; ஆனால், கடந்த ஆட்சியில் அது எங்கே போனது என்றே தெரியவில்லை. அதுகுறித்தெல்லாம் இங்கே பேச விரும்பவில்லை, ஏனெனில் இது அரசு நிகழ்ச்சி; அரசியல் நிகழ்ச்சி அல்ல. உத்தரவிடுங்கள்...உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன். எங்களை உற்சாகப்படுத்துங்கள். துணை முதல்வராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நிதியுதவி வழங்கும் போது, எத்தனை பேர் இருந்தாலும் அவர்களுக்கு நாள் முழுவதும் நின்று கொண்டே நிதியை வழங்கினேன். அதை நினைவு கூர்கிறேன். தனிப்பட்ட இந்த ஸ்டாலினுக்கு கிடைத்த பாராட்டாக நினைக்கவில்லை; மக்களாகிய உங்களுக்கு கிடைத்த பாராட்டு இது என்றார். 

PREV
click me!

Recommended Stories

அமைச்சரின் இலாகா தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை..! ஊராட்சி செயலாளர் பணியில் மோசடி இல்லை..! அடித்துச் சொல்லும் அதிகாரிகள்..!
தமிழகத்தை பாலைவனமாக்க காங்கிரஸ் டார்கெட்.. லாலி பாடும் திமுக அரசு.. இபிஎஸ் ஆவேசம்!