நான் நெனச்சா இதை உடனே செஞ்சுடுவேன்.. ஆனால் ஸ்டாலினையும் சேர்த்துக்க ஆசைப்படுறேன்!! கெத்து காட்டும் முதல்வர்

 
Published : Apr 29, 2018, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
நான் நெனச்சா இதை உடனே செஞ்சுடுவேன்.. ஆனால் ஸ்டாலினையும் சேர்த்துக்க ஆசைப்படுறேன்!! கெத்து காட்டும் முதல்வர்

சுருக்கம்

chief minister palanisamy retaliates opposition parties criticize

தான் நினைத்தால் உடனடியாக பிரதமரை சந்திக்க முடியும் எனவும் ஆனால் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களையும் அழைத்து செல்ல ஆசைப்படுவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த, அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதமரை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. தமிழக மக்களின் பிரதிநிதியான முதல்வரால் பிரதமரை சந்திக்கக்கூட முடியவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, நான் நினைத்தால் உடனடியாக பிரதமரை சந்திக்க முடியும். ஆனால் காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுடனும் சென்று பிரதமரை சந்திக்க விரும்புகிறேன் என பேசினார்.

மேலும் காவிரி விவகாரத்தில் கடந்த காலங்களில் திமுக செய்த துரோகத்தை மறைக்கத்தான் தற்போது ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொண்டுவருவதாக விமர்சித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

100 நாள் வேலையில் முதலில் காந்தி பெயரையே வைக்கவில்லை.. தனி உலகில் வாழும் ஸ்டாலின்.. அண்ணாமலை அட்டாக்!
இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!