அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தால் கதிகலங்கிய எடப்பாடி -  அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை...

First Published May 17, 2017, 6:38 PM IST
Highlights
chief minister edappadi palanichami consulting with ministers in admk office


தோப்பு வெங்கடாசலம் தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ரகசிய ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னாள் சுற்றுசூழல் துறை அமைச்சரும் மேட்டூர் எம்.எல்.ஏவுமான தோப்பு வெங்கடாசலம் தலைமையில், 11 எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் ரகசிய ஆலோசனை நடத்தினர்.

இதில் கூவத்தூரில் அளித்த வாக்குறுதியை எடப்பாடி அரசு செய்ய தவறி விட்டதாக எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால் கட்சி உடைந்து ஆட்சி கையை விட்டு போய் விடுமோ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கதி கலங்கி நிற்கிறார்.

இதையடுத்து தற்போது ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் சில எம்.பிக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

click me!