சென்னையில் ஜூலை 6ம் முதல் புதிய கட்டுப்பாடுகள்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

Published : Jul 04, 2020, 05:53 PM IST
சென்னையில் ஜூலை 6ம் முதல் புதிய கட்டுப்பாடுகள்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

சுருக்கம்

சென்னைக்கு ஜூலை 6ம் தேதி முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

சென்னைக்கு ஜூலை 6ம் தேதி முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னைக்கு ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

* சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்

* டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்

* உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

* தொலைபேசியில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை அனுமதி

* வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படலாம். மறு உத்தரவு வரும்வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!