கோடி ரூபாய் கொடுத்தாலும் படித்த பள்ளியிலே பேச்சை கேட்க ஆளில்லை – ஏமாற்றத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Asianet News Tamil  
Published : May 14, 2018, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
கோடி ரூபாய் கொடுத்தாலும் படித்த பள்ளியிலே பேச்சை கேட்க ஆளில்லை – ஏமாற்றத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சுருக்கம்

cheif minister edapadi palanisami speech in school annual meet

ஈரோடு மாவட்டம் பவானியில் காளிங்கராயன் மணிமண்டபம் திறப்புவிழா, அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது.
முதல்வர் எடப்பாடி 1967 ம் ஆண்டில் 6 ம் வகுப்பில் இந்த பள்ளியில் சேர்ந்து 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

தாம் படித்த பள்ளியிலே  ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றிருந்தாலும், அந்நிகழ்ச்சிக்கு மாணவர்கள் யாருமின்றி விழா நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது!


தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி பேசும்போது, தாம் பள்ளியில் படித்ததை நினைவு கூர்ந்தார். மேலும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடியதை மறக்க முடியாது என்று தெரிவித்த அவர் தனது விளையாட்டு ஆசிரியரின் முயற்சியால்தான் இந்த அளவிற்கு உயர்ந்ததாக தெரிவித்தார்.

மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவேற்றுவதாக அறிவித்தார். நலத்திட்ட உதவி பெற வந்தவர்களும், அரசு அதிகாரிகளும்,ஆளும் கட்சியினரும் மைதானத்தை நிரப்பியிருந்தாலும் மாணவர்களே இல்லாமல் பள்ளி ஆண்டுவிழா எப்படி ஆண்டு விழாவாகும் என பலரும் கூறி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவின் மாஸ்டர் ப்ளான்..! ஒவ்வொரு வீட்டிற்கும் இன்ப அதிர்ச்சி... லீக்கான முக்கிய சீக்ரெட்..!
அரசு ஊழியர்களுக்கு குஷி.. ரூ.3000 பொங்கல் போனஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு