உலக அளவில் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு..!! மருத்துவ கட்டமைப்பில் வலிமையாக இருக்கிறது இந்தியா..!!

Published : Apr 30, 2020, 07:21 PM IST
உலக அளவில் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு..!!  மருத்துவ கட்டமைப்பில் வலிமையாக இருக்கிறது இந்தியா..!!

சுருக்கம்

 2.34 சதவீதம் நோயாளிகளை ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  எனவே இதை சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிக சொற்பம் .  

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில்  மிகக்  குறைந்த அளவிலானவர்களுக்கு  மட்டுமே  வென்டிலேட்டர் பயன்படுத்தப்படுவதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் தெரிவித்துள்ளார் .  நோயில் பாதிக்கப்படுபவர்களில் வெறும் 0.33 சதவீதம்பேர் மட்டுமே வெட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர் என அவர் கூறியுள்ளார் .  இது மற்ற நாடுகளை காட்டிலும் மிக மிகக் குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் . இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரையில் 33 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தி 79 ஆக உயர்ந்துள்ளது .  நாட்டிலேயே அதிக அளவில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உள்ளது . 

டெல்லி குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன ,  இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறி இருக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது, எனவேதான் டெல்லி மும்பை சென்னை போன்ற நகரங்களில் கட்டுக்கடங்காமல் வைரஸ் தொற்று பரவி வருகிறது . இந்நிலையில்  வைரஸால் பாதிக்கப்பட்ட 33 ஆயிரம் பேரில் சுமார் 8 ஆயிரத்து 437 பேர் சிகிச்சை பெற்று இந்தியாவில் குணமடைந்துள்ளனர் . சுமார் 23 ஆயிரத்து 546 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் ,  ஆனால் இதுவரையில் ஒருவர் கூட வென்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . இந்நிலையில் இந்தியாவில் சுமார் 80 சதவீதம் பேருக்கு  லேசான அளவிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

  

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உலக அளவில் தொற்று நோய்களின் தீவிரத்தை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து உள்ளது ,  அதாவது சர்வதேச சுகாதார விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதி முக்கிய திறன்களை இந்தியா பெற்றுள்ளன .  இதன் மூலம் கொரோனா வைரசை  மற்ற நாடுகளை காட்டிலும்  எளிதாக சமாளித்து வருகிறோம் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளில் வெறும் 0.33 சதவீதம் நோயாளிகளே வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளனர் ,  ஆக்சிஜன் ஆதரவில் வெரும் 1.5% நோயாளிகளே உள்ளனர் .  2.34 சதவீதம் நோயாளிகளை ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  எனவே இதை சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிக சொற்பம் .

 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக நோய் தாக்கம் அதிகரித்துள்ளது,  கடந்த மூன்று நாட்களில் 11.3 நாட்களாக உயர்ந்துள்ளது,  உலக அளவில் இறப்பு விகிதம் 7% ஆக இருந்தாலும் இந்தியாவில் இறப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளது. தற்போது நாளொன்றுக்கு 60,000 சோதனைகள் , 16,000 மாதிரி  சேகரிப்பு மையங்கள் , நாடு முழுவதும் 400க்கும் அதிகமான ஆய்வகங்கள்,  என மருத்துவ கட்டமைப்பில் இந்தியா வலிமையாக உள்ளது என தெரிவித்துள்ள அவர் ,  எந்த சவாலையும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!
இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!