
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டது பாஜக -ஆர்.எஸ்.எஸ் இடையேயான உறவில் ஏற்பட்ட பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியே சி.பி.ஆரை முதல் ஆளாக முன்மொழிந்தார். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அவருக்கு வழங்கியது. சி.பி.ராதாகிருஷ்ணன் தூய ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட தலைவர். ஜனசங்க காலத்தில் இருந்து அவர் கட்சிக்காக அடிமட்ட மட்டத்தில் பணியாற்றி வருகிறார்.
அவருக்கு முன்பு, ஜக்தீப் தன்கர் துணைத் தலைவராக இருந்தார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் உடன் நேரடி தொடர்பு இல்லை. அவர் கொல்கத்தா ராஜ்பவனில் இருந்து பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவராக இருந்ததால் நேரடியாக துணைத் தலைவர் பதவியை பெற்றார்.
துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபிஆரை தேர்ந்தெடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸை முழு மனதுடன் பாராட்டினார். ஆனால், 2014, 2019 ஆம் ஆண்டுகளில், நடைபெற்ற தேர்தல்களில் அவர் பாஜகவை சொந்தமாக ஆட்சிக்கு கொண்டு வந்து முதல் 11 முறை செங்கோட்டையில் இருந்து உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றபோது, அவர் ஆஸ்.எஸ்.எஸை பற்றி எதையும் கூறவில்லை. இந்த ஆண்டு ஆ.எஸ்.எஸின் நூற்றாண்டு ஆண்டு. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின் போது, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பாஜக, ஆர்.எஸ்.எஸை சார்ந்திருப்பதை கிட்டத்தட்ட மறுத்துவிட்டார் என்பதையும் மறந்துவிடக் கூடாது. அவர் சொல்ல வந்தது என்னவென்றால், கட்சி இப்போது அதன் சொந்தக் காலில் நிற்கிறது. இப்போது அதற்கு முன்பு போல சங்கத்தின் ஆதரவு தேவையில்லை என்று வெளிப்படையாகவே கூறினார்.
பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, அவரது மூன்றாவது மக்களவைத் தேர்தல் முதல் இரண்டு தேர்தல்களுடன் ஒப்பிடும்போது மிகவும் தோல்விகரமாகவே பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்த விதத்தைத் தவிர, ஆர்.எஸ்.எஸ் தலையீடு இல்லாததே அதற்கு காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இதன் விளைவாக, பாஜக அரசை அமைக்க நிதிஷ் குமாரின் ஜேடியு, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது. சங்கம் முன்பு போலவே களத்தில் பாஜகவுக்காகப் போராடியிருந்தால், கட்சி வெறும் 240 இடங்களுக்கு மேல் வென்று இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.
பிரதமர் மோடியின் முதல் இரண்டு பதவிக்காலங்களைப் பார்த்தால் அவற்றில் பாஜகவுக்கு மிகப்பெரிய பெரும்பான்மை கிடைத்தது. தலித் தலைவர் ராம்நாத் கோவிந்தை, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தினார். அதேபோல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசில் சிக்கிய தன்கர் துணை ஜனாதிபதியாக வருவதற்கான வழியை அவர் ஏற்படுத்தினார். இந்த இரண்டு பதவிக்காலங்களிலும், பாஜகவுக்கு அமோக பெரும்பான்மை இருந்தது. ஆனால், இந்த மூன்று தலைவர்களில் யாருக்கும் ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை. அரசியல் சமன்பாடுகளுடன் சரியாகப் பொருந்திய தனது நம்பகமான முகங்களுக்கு பிரதமர் மோடி ஒரு வாய்ப்பை வழங்கினார். அதாவது, அவர் ஆர்எஸ்எஸ் செல்வாக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டவராகத் தோன்றினார்.
இன்றைய நிலைமை என்னவென்றால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கூட்டணியால் பாஜகவுக்கு இன்னும் ஒரு தேசியத் தலைவரை நியமிக்க முடியவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, இதில் தாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அமித் ஷா கட்சித் தலைவராக ஆனாரோ அல்லது நட்டா பதவி உயர்வு பெற்றாரோ, பாஜக தனது தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு சுணக்கம் ஏற்படவில்லை. இந்நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜக புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தால், அது ஆர்எஸ்எஸ்ஸின் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
பாஜகவின் அடிப்படை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . சங்கம் அர்ப்பணிப்புடன் ஆதரிக்கவில்லை என்றால், 2024 போன்ற பதட்டமான முடிவு வரக்கூடும். இது பாஜகவில் உள்ள ஓரங்கட்டப்பட்ட தலைவர்களையும் பாதிக்கலாம். கான்ஸ்டிடியூஷன் கிளப் தேர்தலில் பாஜக தலைவர் சஞ்சீவ் பாலியனுக்கு எதிராக ராஜீவ் பிரதாப் ரூடி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு உதாரணம் மட்டுமே. ரூடிக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வெளிப்படையான ஆதரவு கிடைத்தது. மறுபுறம், சங்கத்தின் தன்னார்வலர்கள் களத்தில் இறங்கினால், மகாராஷ்டிரா, ஹரியானா முதல் டெல்லி வரையிலான சட்டமன்றத் தேர்தல்களில் முடிவுகள் பாஜகவுக்கு வெற்றி பெற்று தந்தது. இந்நிலையில், மோடியும், அமித் ஷாவும் இப்போது ஆர்.எஸ்.எஸ் முன் முழுமையாக சரணடைந்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை நாம் தேடினால், அடிப்படையில் ஐந்து விஷயங்கள் தெரியும்
1) மோடி அரசின் மீது அழுத்தம் கொடுக்க ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. இதில் 75 வயதில் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுமாறு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய அறிவுரையும் அடங்கும்.
2) பத்தாண்டு காலமாக பாஜகவில் வளர்ந்து வரும் அதிருப்தியாளர்களின் குழு. மற்ற சித்தாந்தங்களைச் சேர்ந்த தலைவர்களின் ஆதிக்கம் கட்சியில் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாலும், அர்ப்பணிப்புள்ள பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்களை புறக்கணிப்பதாக தகவல்கள் வருவதாலும் இது ஏற்படுகிறது.
3) அமெரிக்க ஜனாதிபதியால் இந்தியா மீது 50% வரி விதிக்கப்பட்டது.
4) அரசிற்கு எதிரான அனைத்து முனைகளிலும் எதிர்க்கட்சிகளின் ஆக்ரோஷமான அணுகுமுறை மற்றும் அவர்களிடையே வளர்ந்து வரும் ஒற்றுமை.
5) சங்கத்தின் சித்தாந்தத்தை முறையாக செயல்படுத்தத் தொடங்குதல் ஆகியவை அடங்கும்.