ஒரே ஒரு லெட்டர் தான்..! முதல்வர் ஸ்டாலினை விழுந்து, விழுந்து பாராட்டும் பாஜக பிரமுகர்

By manimegalai aFirst Published Oct 15, 2021, 9:30 PM IST
Highlights

தீபாவளி தருணத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

சென்னை: தீபாவளி தருணத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் தருணத்தில் பட்டாசை வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி, ராஜஸ்தான், அரியானா, ஒடிசா மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பட்டாசு விற்பனைக்கான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந் நிலையில் இந்த கடிதத்துக்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

சிறப்பு! பாராட்டுகள். அதே வேளையில், தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதில் உள்ள நேரக்கட்டுப்பாடுகளை நீக்கவும். இந்தியாவில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருக்கட்டும்.மேலும், பட்டாசு மாசினால் ஏற்படும் தீங்கை விட அதன் புகையினால் டெங்கு கொசுக்கள் அழிவதோடு இனப்பெருக்கத்தை தடுக்கிறது

பண்டிகைகளின் போது, குறிப்பாக தீபாவளியின் போது இந்திய மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். ஆகவே, பட்டாசுகளை தடை செய்ய வேண்டாம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதை நாம் வரவேற்கிற அதே நேரத்தில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதில் விதிக்கப்படும் பல்வேறு நேரக்  கட்டுப்பாடுகளை அகற்றி மக்கள் முழுமையாக கொண்டாட ஆவண செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் என்று டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.

click me!