எனது அண்ணன் அழகிரி சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை: எனது அண்ணன் அழகிரி சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னையில் புகழ்பெற்ற லயோலா கல்வி நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட கட்டித்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்த லயோலா கல்லூரியில் என் அண்ணன் அழகிரி படித்தார். பின்னர் தற்போதைய எம்பி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படித்தனர். இங்கு படித்தவர்கள் உலகளவில் சிறப்புடன் விளங்குகின்றனர்.
நான் மட்டும் இந்த கல்லூரியில் படிக்கவில்லை, எனக்கு அந்த வாய்ப்பும் கிட்டவில்லை. அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலம் என்ற நிலைமைக்கு மாற வேண்டும்.
காமராஜரின் காலத்தில் பள்ளிகள் உருவாகின. திமுக என்ற இயக்கம் உருவானதே கல்லூரிகளில் தான் என்று ஸ்டாலின் பேசினார்.