பாராளுமன்றத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை சரியாக எட்டு மணிக்கு நாடெங்கிலும் தொடங்கியுள்ள நிலையில் 8.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 199 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாராளுமன்றத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை சரியாக எட்டு மணிக்கு நாடெங்கிலும் தொடங்கியுள்ள நிலையில் 8.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 199 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள காங்கிரஸ் வெறுமனே 86 இடங்களின் மட்டுமெ முன்னணியில் இருக்க இதர கட்சிகள் 60 இடங்களில் முன்ன்ணியில் உள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க. 300 இடங்களைத் தொடும் என்று சொல்லப்பட்டது இப்போதைய நிலவரப்படி சரியாகவே உள்ளது.
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். தமிழகத்தில் தி.மு.க 12 இடங்களில் முன்னணியில் உள்ளது. அதிமுக 4 இடத்தில் கூட முன்னணியில் இல்லை