காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு பீகார் மாநில காங்கிரஸ் நிர்வாகி எழுதிய கடிதம்.!! கட்சியில் பரபரப்பு.!!

By Thiraviaraj RMFirst Published Feb 19, 2020, 10:49 PM IST
Highlights

டெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70இடங்களில்60 இடங்களில் டெபாசிட்டை இழந்தது.பீகாரைச் சேர்ந்த இன்திகாப் ஆலம் என்ற காங்கிரஸ் நிர்வாகி கட்சித் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

T.Balamurukan

டெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70இடங்களில்60 இடங்களில் டெபாசிட்டை இழந்தது.பீகாரைச் சேர்ந்த இன்திகாப் ஆலம் என்ற காங்கிரஸ் நிர்வாகி கட்சித் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்.அதில்.,  

"காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்காளர்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும். கிராம பஞ்சாயத்து முதல் மாநிலம் வரையில் அனைத்து மட்டங்களிலும் இந்த சந்திப்பு ஒரு மாதத்திற்கு நடைபெற வேண்டும். இந்த பிரசாரத்தைத் தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைக்க வேண்டும். இந்த சந்திப்பின்போது காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று வாக்காளர்களிடம் கேட்டு, அவர்களது கருத்துக்களை நாம் தெரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் மீது ஏன் வாக்காளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று இந்த சந்திப்புகள் மூலம் நமக்குத் தெரிய வரும்".என்று இன்திகாப் ஆலம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
இன்னும் சில மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி எழுதியிருக்கும் கடிதம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பீகாரின் பக்கத்து மாநிலமான ஜார்க்கண்டில் காங்கிரஸ்,ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைப் கைப்பற்றியிருக்கிறது. 

click me!