கொரோனாவை சொல்லி படுகொலை... மோடியை தூக்கிலிடவேண்டும்... நந்தினி போராட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 28, 2021, 11:23 AM IST
Highlights

நாங்கள் ஆரம்பம் முதலே இந்த சதித்திட்டத்தை அம்பலப்படுத்தி உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக பாசிச மோடியை சட்டத்தின்கீழ் நிறுத்தி உச்ச பட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் 

கொரானாவின் பெயரில் அந்நிய சக்திகளுடன் சேர்ந்து சதி செய்து ஆபத்தான மருந்துகளை கொடுத்து பல லட்சம் இந்தியர்களை படுகொலை செய்த கொடுங்கோலன் மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்கிலிட வேண்டும் எனக் கோரி மதுரை காந்தி மியூசியம் அருகே இன்று 28.06.21 காலை 9 மணி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தார் நந்தினி.

உண்ணாவிரத போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அவர் வீட்டுச்சிறை வைக்கப்பட்டுள்ளதால், ‘’டாஸ்மாக்கை எதிர்த்தாலும் வீட்டுச்சிறை. மோடியை எதிர்த்தாலும் வீட்டுச்சிறை..தமிழ்நாட்டில் நடப்பது ஸ்டாலின் ஆட்சியா? பாசிச மோடியின் ஆட்சியா?கொலைகாரன் மோடியை தூக்கில் போடவேண்டும் என போராட்டம் அறிவித்தால் எங்களை வீட்டுச் சிறையில் வைக்கிறது திமுக அரசு..இந்திய மக்களை கொன்று குவிக்கும் தீய நோக்கத்துடன் பாசிச மோடி கும்பல் நடத்திவரும் கொரோனா சதித்திட்டத்தை முழுமையாக அம்பலப்படுத்துவோம்.’’ என்கிறார்

.

இதுகுறித்து மேலும் நந்தினி, ‘’கடந்த ஒன்றரை வருடங்களாக மத்திய பாசிச மோடி அரசு கொரோனாவின் பெயரில் அந்நிய சக்திகளுடன் சேர்ந்து மிகப் பெரிய சதித் திட்டத்தைத் தீட்டி இந்திய மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் திட்டமிட்டு அழித்து வருகிறது. இந்திய அரசியல் சாசனம் இந்திய மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறித்து மக்கள் அனைவரையும் அடிமைகளாக மாற்றி ஒரு நிரந்தரமான சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்துவதே இந்த பாசிச கும்பலின் நோக்கமாகும். இதற்காகவே கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என நாட்டு மக்களிடம் அச்சத்தை உண்டாக்கி ஊரடங்கு என்ற பெயரில் சர்வாதிகாரத்தை திணித்து வருகிறது.

டெஸ்டிங் என்ற பெயரில் கொரோனா நோயாளிகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. இவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்துகளை கொடுத்து லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பாசிச மோடி அரசின் இந்த சதித் திட்டத்துக்கு மருத்துவ மாபியா கும்பல், கார்ப்பரேட் ஊடகங்களும் முழு உடந்தையாக செயல்படுகின்றனர். சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு மிகப் பெரிய போரை பாசிச மோடி அரசு கொடுத்துள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பல கோடி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து உள்ளனர். நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளோ, ஊடகங்களோ மோடி அரசின் இந்த சதித்திட்டத்தை எதிர்க்காமல் உடந்தையாக உள்ளனர்.

நாங்கள் ஆரம்பம் முதலே இந்த சதித்திட்டத்தை அம்பலப்படுத்தி உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக பாசிச மோடியை சட்டத்தின்கீழ் நிறுத்தி உச்ச பட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 28. 6 .2021ல் மதுரை காந்தி மியூசியம் முன்பு உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தோம். இதை தடுப்பதற்காக 27. 6 .21 மதியம் முதல் காவல்துறையால் நாங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம். நாட்டு மக்களை கொன்று அழிக்கும் மோடிக்கு எதிராக ஜனநாயக முறையில் போராட விடாமல் திமுக அரசின் காவல்துறை தடுக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது ஸ்டாலின் ஆட்சியா பாசிச மோடி ஆட்சியா?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

click me!