
கோவை கார் குண்டு வெடி விபத்து
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக காவல்துறை மீது குற்றச்சாட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்க்கு பதி்ல் அளிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் நீண்ட அறிக்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக காவல்துறை டிஜிபி திரு சைலேந்திர பாபு அவர்கள் காவல்துறையில் இருக்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கிய அறிக்கையின் கீழ்க்காணும் பகுதிகளை இதுவரை கண்டிருக்கமாட்டார் என்பதை அவர் வழங்கிய பத்திரிக்கை செய்தி தெளிவுபடுத்திவிட்டது. இந்த பகுதிகளின் விளக்கங்கள் இந்த அறிக்கையில் உள்ளது.
நான் பல கருத்துக்கள் கூறி விசாரணையின் போக்கை திசைதிருப்ப முயற்சிப்பதாக தொடங்குகிறது காவல்துறை தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் அரசை கேள்வி எழுப்புவதும் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பதும் எங்களது பொறுப்பாக உணருகிறோம். அதை கூடாது என்பதற்கு காவல்துறைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை டிஜிபி திரு சைலேந்திர பாபு அவர்களே, நீங்கள் ஒரு காவல் அதிகாரி தானே தவிர தங்களை ஒரு சர்வாதிகாரியாக நினைத்துக்கொள்ள வேண்டாம், விசாரணையின் போக்கை திசை திருப்புவதாக நான் கருத்துக்கள் சொன்னதாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி நான் சொன்ன கருத்துக்கள் பின்வருமாறு:
1. 23 ஆம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி என்ற செய்தி வந்தது. 23ஆம் தேதி மதியம் இதை பற்றி பதிவிட்டிருந்த நான் காவல்துறை உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கியதை பாராட்டினேன். மற்றும் இந்த வெடி விபத்தில் இருக்கும் மர்மத்தை காவல்துறை விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.
2, 23ஆம் தேதி இரவு, நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை, இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும் இதை மேற்கொண்ட நபருக்கு ISIS என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்றும் நான் பதிவிட்டிருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா?
3. சுமார் 24 மணி நேரம் காத்திருந்த பின்னரும் காவல்துறையிடமிருந்தோ தமிழக அரசிடம் இருந்தோ எவ்வித தகவலும் வராததால், 24.ஆம் தேதி இரவு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 30 மணி நேரம் ஆன பின்பும் தமிழக முதல்வர் இதை பற்றி பேச மறுப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தேன். இன்றுடன் இந்த சம்பவம் முடிந்து 7 நாட்கள் ஆகியிட்டது. இதுவரை தமிழக முதல்வர் மெளனம் காப்பது அனைவரும் அறிந்ததே, இந்த துறைக்கு சற்றும் தொடர்பே இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்?
கோவையில் முழு அடைப்பு! நாங்கள் சொல்லவே இல்லை!.. நீதிமன்றத்தில் விளக்கமளித்த அண்ணாமலை
4. தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை மௌன நிலையில் இருப்பதால், ஒரு ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக பத்திரிகையாளர் வாயிலாக சில கேள்விகளை முன் வைத்தோம். அந்த கேள்விகள் பின்வருமாறு தனிப்படை அமைத்து விசாரித்து கொண்டிருக்கிறோம். என்று சொல்லும் காவல்துறை அடுத்தகட்ட உண்மைகளை சொல்வதற்கு தயங்குவது என்?. இது வரை இது ஒரு தீவிரவாத சதி செயல் என்று சொல்ல மறுப்பது ஏன்?? இதில் விசித்திரம் என்னவென்றால் நேற்று நீங்கள் கொடுத்த பத்திரிகை செய்தியில் தற்கொலைப்படை நடந்தது என்றோ தீவிரவாத சதிச்செயல் என்றோ குறிப்பிடப்படவில்லை. இப்போது தான் சிலிண்டர் வெடிப்பிலிருந்து குண்டு வெடிப்புக்கு தமிழக காவல்துறை முன்னேறியுள்ளது.
இதை தீவிரவாத தாக்குதல் என்றோ தற்கொலைப் படை தாக்குதல் என்றோ குறிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். அக்டோபர் 21ஆம் தேதி ஜமேஷா முபீன் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிட்டிருந்தோம்-இதை காவல்துறை மறுக்க முடியுமா? இறந்த ஜமேஷா முபீன் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டினோம் காவல் துறை இதை மறுக்குமா? கைது செய்யப்பட்ட 3 பேர் மீது UAPA சட்டம் பாயாதது என் என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.
அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! இதெல்லாம் அபத்தம் - எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!
15 மாதங்களாக தேசிய புலனாய்வு முகமையின் காவல் நிலையத்திற்கு அனுமதி வழங்காமல இழுத்தடித்தது ஏன் என்ற கேள்வியை தமிழக அரசுக்கு முன்வைத்தேன். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கோவை தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசை திருப்பும் விதமாக என்ன கேட்டுவிட்டோம் என்பதை காவல்துறை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். 25ஆம் தேதி இந்த வழக்கை தமிழக அரசு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதை வரவேற்று மீண்டும் இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சில ஆலோசனைகளை அரசுக்கு முன் வைத்தோம்.
18ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அணைந்து மாநிலங்களுக்கும் வழங்கிய பொதுவான கற்றறிக்கை என்றும் இதில் கோவை தாக்குதல் பற்றி குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் இல்லை என்ற ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதத்தை நேற்று பத்திரிகை செய்தி வாயிலாக தமிழக காவல்துறை தலைமை முன்வைத்துள்ளது. மேலும் 18ஆம் தேதி சுற்றறிக்கை தங்களுக்கு 21ஆம் நேதி கிடைத்தநாகவும் அதற்கு பின் அதன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இது ஒரு பொய் 21ஆம் தேதிக்கு முன்பே மத்திய உள்துறையின் சுற்றறிக்கை தமிழக காவல்துறைக்கு வந்துவிட்டது. என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
மேலும் குறிப்பிட்ட எச்சரிக்கை என்பது அறிவாலய இளவரசர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிக்கும் திரைப்படத்திற்கு எழுதப்படும். திரைக்கதை அல்ல மற்றும் இது பொதுவாக வழங்கப்பட்ட சுற்றறிக்கையும் அல்ல (கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை காவல்துறை மறுக்குமா?
திமுகவினராக செயல்படும் டிஜிபி..! ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் கொடுக்கப்படும்..! அண்ணாமலை ஆவேசம்
21ஆம் தேதி அனைத்து காவல் ஆணையர்களுக்கும் காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து பகிரப்பட்ட இந்த அறிக்கையில் அசம்பாவித சம்பவங்கள் எதும் நடந்துவிடக் கூடாது என்பதை கட்டிக்காட்டி போதிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று குறிப்பிட்டதை மறுப்பிர்களா? அக்டோபர் மாதம் 23ஆம் தேதிக்கு முன்னரே ஐமேஷா முபீன் பற்றிய தகவல்கள் - காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறைக்கு (காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது)
96 நபர்களுக்கு ISIS இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது. அந்த தனிப்பிரிவு அதில் ஜமேஷா முபீன் 89ஆம் இடத்தில் உள்ளார். இந்த வருடம் ஜூலை மாதம் 10ஆம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபீனை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறையின் உளவுத்துறை.
விசாரணையின் போக்கை திசைதிருப்புதல் என்று பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட டிஜிபி சைலேந்திர பாபு அவர்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறோம்.
1) பெரோஸ் இஸ்மாயில் என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 165 தீவிரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருந்ததால் இவர் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். அதன் பின் இவர் கோவையில் தங்கியிருந்தார். இவர் தமிழக உளவுத்துறை அல்லது கோவை காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பியது எப்படி?
நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்ததை தங்களது பத்திரிகை செய்தியில் கட்டிக்காட்டி இருந்தீர்கள். நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்தபோது நடவடிக்கைகளை நீங்கள் இன்று ஒரு தனிப்படை அமைந்து விசாரித்துக் கொள்ளுங்கள். தமிழனின் பெருமையை கர்நாடகாவில் நிலைநாட்டி விட்டு வந்திருக்கிறேன் மீண்டும் காக்கி அணிய எண்ணம் இல்லை. ஒரு காலத்தில் காக்கி அணிந்தவன் என்பதை மறந்துவிட வேண்டாம். இதற்கு முன் திண்டுக்கல் எஸ்பியாக நீங்கள் செய்த 'சாதனைகள்' காஞ்சிபுரம் டிஐஜியாக செய்த "சாதனைகளை" மக்கள் மறந்திருக்கலாம். நான் மறக்கவில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக ஆதாரங்களுடன் உங்களை கேட்கும் கேள்விகள் உங்களை அச்சத்தில் ஆழ்த்தி அறிவாலயத்திடம் அறிக்கை பெறும் அளவிற்கு தள்ளியுள்ளதே எனபதில் வருத்தமே. வாழ்க கலைஞர் வாழ்க தளபதி வாழ்க இளவரசர் உதயநிதி போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தால் பத்திரிகை செய்தி மிக சிறப்பாக இருந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் நிகழாமல் இருக்க உடனடியாக சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்பதையும் தமிழக மக்களின் சார்பாக ஒரு வேண்டுகோளாக உங்களிடம் முன்வைக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்