என்னை சிக்கவைக்க பார்க்கிறார்கள்..நான் ஒரு நிரபராதி.! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டிடிவி தினகரன் !

Published : Apr 13, 2022, 12:45 PM IST
என்னை சிக்கவைக்க பார்க்கிறார்கள்..நான் ஒரு நிரபராதி.! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டிடிவி தினகரன் !

சுருக்கம்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லியில் அமலாக்கத் துறை  அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார். 

இரட்டை இலை சின்னம் :

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகரை, 2017 ஏப்.16-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

அமலாக்கத் துறையினர் தினகரனிடம் விசாரணை நடத்தியபோது, ‘சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், தற்போது ஜாமீனில் இருக்கிறார். இதற்கிடையே, சுகேஷிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில், தினகரன் முன்பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். 

சுகேஷின் இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து, டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஏப்.8-ம் தேதி ஆஜராகுமாறு தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அன்று அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லியில் அமலாக்கத் துறை  அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார். 

டிடிவி தினகரன் :

 ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆஜரான நிலையில், தற்போது மீண்டும் ஆஜராகியுள்ளார். இந்த விசாரணை சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘சுகேஷ் சந்திரசேகரின் மாறுபட்ட வாக்குமூலம் காரணமாக தன்னிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராவேன்.  

சுகேஷை யாரோ இயக்குகிறார்கள். அவர் வேண்டுமென்றே என்னை சிக்க வைக்க மாற்றி மாற்றி வாக்குமூலம் அளிக்கிறார்கள். அவர் பின்னால் இருப்பது யார் என தெரியவில்லை என்றும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

இதையும் படிங்க : மக்களே உஷார்..! ஆரஞ்சு அலெர்ட் கொடுத்த வானிலை மையம்.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்