அமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும்... திமுகவுக்கு நாங்கள் போட்ட பிச்சை... பாதிரியார் மீது புகார்!

By Thiraviaraj RMFirst Published Jul 22, 2021, 11:43 AM IST
Highlights

பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம். பாரத மாதா மீது செருப்பு பட்டுவிட கூடாதாம். ஆனால் நாம் ஷூ போட்ருக்கோம் எதற்கு? பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாம் ஷூ போட்டு மிதிக்கிறோம். 

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, ‘’இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எத்தனை கோவிலுக்கு சென்று கும்பாபிஷேகம் செய்தாலும், எத்தனை கோவிலுக்கு சென்று துணி உடுத்தாமல் சாமி கும்பிட்டாலும், இந்துக்கள் ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள். மண்டைக்காட்டு அம்மன் பக்தர்களும், இந்துக்களும் உங்களை ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கவில்லை. திமுக ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லீம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை. இதை மறந்து விடாதீர்கள்.

உங்கள் திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. உங்களுக்கு ஓட்டு போட சொன்னது யார்? எங்கள் ஆயர்கள் எங்க கண் அசைப்பார்கள். கிறிஸ்தவ ஊழியர்கள், பெந்தகோஸ்தே ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பார்கள். நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளரான சுரேஷ் ராஜனிடம் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து நாங்கள் ஓட்டு கேட்கிறோம் என்று கூறினோம். அவரோ, வேண்டாம். இதனால் ஹிந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று மறுத்து கேட்டார். இதனால் எம்.ஆர்.காந்தி (பா.ஜ.,) நாகர்கோவிலில் ஜெயித்துவிட்டார்.

பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம். பாரத மாதா மீது செருப்பு பட்டுவிட கூடாதாம். ஆனால் நாம் ஷூ போட்ருக்கோம் எதற்கு? பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாம் ஷூ போட்டு மிதிக்கிறோம். நமக்கு சொறி, செரங்கு வந்துட கூடாது என தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்தது. இந்த பூமா தேவி, ரொம்ப டேஞ்சரான ஆள். சொறி பிடிக்கும். சிரங்கு பிடிக்கும். அதனால செருப்பு போட்டுக்கங்கனு கொடுக்கிறாங்க. அழகாக சொன்னார்கள் இஸ்லாமியர்கள். 'எங்கள் முடி.. ரோமத்தை கூட..' ரோமம் என்ன எங்கள் பாஷையில், எங்க மயிரை கூட நீங்க பிடிங்க முடியாது. அதான் அர்த்தம்.. பைபிள்ளயே இருக்கு.. ஒரு மயிரை கூட நீ பிடுங்க முடியாது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாங்கள் மெஜாரிட்டி 42 சதவீதத்தில் இருந்தோம். இப்போது அது 62 சதவீதத்தை தாண்டி விட்டது. விரைவில் அது 70 சதவீதத்தை தொட்டு விடும். நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருப்போம். உங்களால் அதை தடுக்க முடியாது. அதனை மிகவும் எச்சரிக்கையாக ஹிந்து சகோதரர்களுக்கு நாங்கள் சொல்லி கொள்கிறோம். ஆர்.எஸ்.எஸ்.,காரன் என்றாலும் சரி, பா.ஜ.,காரன் என்றாலும் சரி எங்களுக்கு கவலையே கிடையாது. நீ எங்களை தடுக்க முடியாது.

கிறிஸ்தவ ஆயர்கள் சொல்லித்தான் மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டனர்.

குமரியில் நாங்கள் 62%. இந்துக்களுக்கு இது ஒரு எச்சரிக்கை

இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பாதிரியின் மதவெறி உரை

மதவெறி அரசியல் செய்வது யார்? கலவரம் தூண்டும் இவரின் கைது எப்போது! pic.twitter.com/Xew9ULP1S6

— Fervid Indian 🇮🇳 (@FervidIndian)

 

பிரதமர் மோடியின் கடைசி காலம் மிகவும் பரிதாபமாக இருக்கும். எழுதி வைத்து கொள்ளுங்கள். நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால், அமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். வரலாறு காணும்.  எங்களது சாபம் உங்களை அழிக்கும். நிர்மூலமாக்கும்’’ என பேசியுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் சேலத்தை சேர்ந்த நுஷ்யா என்பவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

click me!