
அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்கள் 122 பேரும் நாளை சென்னை வரவேண்டும் என அதிமுக தலைமை கழகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அவசர அழைப்பு தமிழகத்தில் நிலவி வரும் அசாதர சூழ்நிலையை புரட்டி போடும் வகையில் அமையும் என தெரிகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா செயல்பட்டு வந்தார். அதையடுத்து முதல்வராக இருந்த ஒ.பி.எஸ்ஸின் பதவியை பறித்ததால் சசிகலாவுக்கு எதிராக ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கினார்.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு டிடிவி தினகரனே பொதுச்செயலாளர் போன்ற தோரணையில் அனைத்து விதமான கட்சி விவகாரத்திலும் மூக்கை நுழைத்து செயல்பட்டு வந்தார்.
இது ஒருபுறம் இருக்க எட்டாக்கனியாக இருந்த முதல்வர் பதவி எடப்பாடிக்கு கிடைக்கவே அதை எப்படியாவது தக்கவைத்து கொள்ளவேண்டும் என்ற முனைப்பில் பனிப்போர் போன்று அவர் செயல்பட்டு வந்தார்.
அதாவது எதையும் கண்டும் காணமல் இருந்த இடம் தெரியாமல் நடந்து கொள்வது போல செயல்பட்டார் எடப்பாடி.
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தினகரன் தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரின் இறுதி சடங்கில் பங்கேற்க டி.டி.வி. தினகரன், சசிகலா கணவர் நடராஜன், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் தஞ்சாவூர் சென்றனர்.
அங்கு தினகரனின் வலுக்கட்டயத்திற்கு காரணமாகவே இறுதி சடங்கிற்கு வந்ததாகவும் ஒ.பி.எஸ்க்கு அதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு இடையே காரசார பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தினகரனை கைது செய்ய டில்லி குற்றப்பிரிவு போலீசார் நாளை சென்னை வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் நிலவி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள தினகரன் சசிகலாவை சந்தித்து ஆலோசிக்க பெங்களூர் சென்றுள்ளார்.
நேரம் கடந்து சென்றதால் இன்று சசிகலாவை அவரால் சந்திக்க முடியவில்லை. நாளையும் சந்திப்பது சந்தேகமே என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்கள் 122 பேரும் நாளை சென்னை வரவேண்டும் என அதிமுக தலைமை கழகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அவசர அழைப்பு தமிழகத்தில் நிலவி வரும் அசாதர சூழ்நிலையை புரட்டி போடும் வகையில் அமையும் என தெரிகிறது.
ஆனால் அதில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களும் உள்ளனர். அதனால் அனைத்து எம்.எல்.ஏக்களும் வருவார்கள் என்பது சாத்தியமில்லை.
இதை மறைப்பதற்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக ஐ.என்.எஸ் போர்க்கப்பலில் பயணம் செய்ய அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து எம்.எல்.ஏக்களும் போர்க்கப்பலில் பயணம் செய்து ஆக வேண்டும் என்ற சட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.