
அதிமுகவின் பிளவிற்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் என் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கலில் படு பிசியாக உள்ளனர்.
கடந்த மார்ச் 16 ஆம் தேதி ஆரம்பித்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
இதனிடையே இரட்டை இலையை யார் கைப்பற்றுவது என்ற நோக்கில் சசிகலா தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் நேற்று வரை மனுதாக்கல் செய்யாமல் இருந்தது.
இதையடுத்து டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னமும் மதுசூதனனுக்கு இரட்டை மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று வரை வெயிடிங்கில் இருந்த டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பு மதுசூதனனும் இன்று மனுதாக்கல் செய்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தீபா, அதிமுகவின் பிளவிற்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் என் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார்.
மேலும் அதிமுக பிளவு அதிமுகவினருக்கு ஒரு மிகப்பெரிய பாடம் எனவும், ஒரு நல்ல கட்சியின் தலைமையை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கு இதுவே எடுத்துகாட்டு எனவும் தெரிவித்தார்.