பெண் என்ஜீனியரை கர்பமாக்கிவிட்டு தலைமறைவான பலே காதலன்.. குழந்தையையும், தாயையும் கொள்ள முயற்சி.

By Ezhilarasan BabuFirst Published Jan 9, 2021, 11:39 AM IST
Highlights

இதனால் அதிர்ச்சியடைந்த சந்திய கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி அழகியமண்டபம் பகுதியில் உள்ள தனது காதலன் வீட்டிற்கு சென்று கைக்குழந்தையுடன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதான படுத்தி காதலன் வீட்டிலேயே குடியமர்த்தினர்

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தியா.(26) பி.இ எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த உறவினரான ரஜீஷ் (28)என்ற டெம்போ டிரைவரை காதலித்தார்.

காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தியா கர்ப்பமானார். இதுகுறித்து காதலன் ரஜீஷ் இடம் தெரிவித்த நிலையில் ரஜீஷ் சந்தியாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் உஷாரான சந்தியா பெற்றோரிடம் தனது நிலைமையை எடுத்துரைத்து, ரஜீஷ் தன்னிடமிருந்து நழுவ முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் ரஜீஷ்சை சந்தித்து சந்தியாவை திருமணம் செய்ய வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ரஜீஸ் தனது பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என கூறி தனது வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்களுக்கு தெரியாமல் சந்தியாவின் வீட்டருகே உள்ள கோயிலில் மாலை மாற்றி இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதோடு பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்து கொண்டனர். 

அதன் பின்னர் ரஜீஷ் ஓரிரு வாரங்கள் தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் சந்தியாவுடன் சந்தியா வீட்டிலேயே ரகசிய குடித்தனம் நடத்தி வந்துள்ளார். பின்னர் தான் கேரளாவிற்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற ரஜீஷ் பின்னர் சந்தியாவுடன் எந்த தொடர்பும் இல்லாமல் தலைமறைவானார். பல மாதங்களாக காதலன் ரஜீஷை தொடர்பு கொள்ள நினைத்தும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் சந்தியாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை புரிந்து கொண்ட சந்தியா ரஜீஷ் உடன் சேர்ந்து வைக்குமாறு காவல்துறையின் உதவியை நாடி தக்கலை காவல் நிலையம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகாரளித்தார். புகார் மீது நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென ஒருநாள் சந்தியாவின் செல்போனில் தொடர்பு கொண்ட ரஜீஷ், உன்னுடன் வாழ விருப்பமில்லை என்றும், தனக்கு வேறு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், சந்தியாவை விவாகரத்து செய்ய போவதாகவும் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சந்திய கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி அழகியமண்டபம் பகுதியில் உள்ள தனது காதலன் வீட்டிற்கு சென்று கைக்குழந்தையுடன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதான படுத்தி காதலன் வீட்டிலேயே குடியமர்த்தினர். அதுவரை ரஜீஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாதிருந்த ரகசிய குடித்தன வாழ்க்கை தெரிய வந்தது. இதனால் ரஜீஷின் பெற்றோர் அந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சந்தியா தனது தாயார் மற்றும் கைக்குழந்தையுடன் தனது காதலன் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த ரஜீஷ் க்கு தகவல் தெரியவே, தனது ரகசிய குடித்தனம் வெளியே தெரிந்ததால் தனக்கு அவமானம் என விரக்தி அடைந்து, நேற்று கேரளாவில் இருந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த சந்தியா அவரது தாயார் மற்றும் குழந்தையை கம்பியால் தாக்கி அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றினார். அவர்களது துணிமணிகளையும் பொருட்களையும் வீட்டிற்கு வெளியே வீசியெறிந்து வீட்டை பூட்டி தப்பியோடினார். 

இதில் சந்தியா மற்றும் குழந்தைக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்ட நிலையிலும், சந்தியா வீட்டருகே இருந்த ஏணி மூலம் மொட்டை மாடியில் ஏறி வீட்டிற்குள் செல்ல முயற்சித்தார்.இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் இந்த தாக்குதல் குறித்து தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சந்தியா மற்றும் குழந்தையை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு அனுப்பி வைத்ததோடு, காதலியை தாக்கி தப்பியோடிய ரஜீஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். ரகசிய திருமண வாழ்க்கை அம்பலமானதால் காதலியையும் கைக்குழந்தையும் காதலன் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

click me!