8 ஆண்டுகள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தவர் விமான நிலையத்தில் கைது.. தமிழ்நாடு போலீஸ்னா சும்மாவா.?

By Ezhilarasan BabuFirst Published Jul 24, 2021, 4:56 PM IST
Highlights

குவைத்தில் தான் கூலி வேலை செய்துவந்த நிலையில் 8 ஆண்டுகளாகிவிட்டதால், போலீசாா் தன் மீதான வழக்குகளை மறந்திருப்பாா்கள் என கருதி, குவைத்திலிருந்து சொந்த ஊருக்கு விமானத்தில் சென்னை திரும்பியதாகவும், 

8 ஆண்டுகள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்துவிட்டு, நேற்றிரவு குவைத்திலிருந்து விமானத்தில் திரும்பி வந்தபோது,சென்னை விமானநிலையத்தில் குடியுறிமை அதிகாரிகள் கைது செய்தனா்.

குவைத்திலிருந்து தனியாா் சிறப்பு விமானம் ஒன்று நேற்று இரவு சென்னை பன்னாட்டு விமானநிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் கம்யூட்டா் மூலம் சோதனை செய்து அனுப்பினா். அப்போது கன்னியாகுமரியை சோ்ந்த தாதீயூஸ்(33) என்பவரும் அந்த விமானத்தில் குவைத்திலிருந்து வந்தாா். அவருடைய பாஸ்போா்ட்டை பரிசோதித்தபோது, கம்யூட்டரில் தாதீயூஸ் கன்னியாகுமரி போலீசால் கடந்த 8 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. மேலும் இவா் மீது 2013 ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு கோஷ்டி மோதல், கொலை மிரட்டல், அடிதடி சண்டை போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரியவந்தது. 

இதையடுத்து பயணி தாதீயூஸ்சை வெளியே விடாமல், குடியுறிமை அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனா். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த கோஷ்டி மோதல் வழக்கில் போலீசாா் கைது செய்துவிடுவாா்கள் என்ற பயத்தில் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாகவும், குவைத்தில் தான் கூலி வேலை செய்துவந்த நிலையில் 8 ஆண்டுகளாகிவிட்டதால், போலீசாா் தன் மீதான வழக்குகளை மறந்திருப்பாா்கள் என கருதி, குவைத்திலிருந்து சொந்த ஊருக்கு விமானத்தில் சென்னை திரும்பியதாகவும், ஆனால் சென்னை விமானநிலையத்தில் குடியுறிமை அதிகாரிகளிடம் தான் சிக்கிக்கொண்டதையும் அவர் கூறினார்.

இதையடுத்து சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, 8 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி சிக்கிய தகவலை தெரிவித்தனா். கன்னியாகுமரியிலிருந்து தனிப்படை போலீசாா் சென்னை விமானநிலையத்திற்கு வந்து தாதீயூஸ்சை அழைத்து செல்ல உள்ளனர். முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தாதீயூஸ்சை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சா்வதேச விமானநிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்திருந்தது குறிப்பிடதக்கது.

 

click me!