ஆரம்ப முதலே மந்த நிலையில் வாக்குப்பதிவு... 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.60% ஓட்டுப்பதிவு..!

Published : Apr 06, 2021, 06:53 PM ISTUpdated : Apr 06, 2021, 06:54 PM IST
ஆரம்ப முதலே மந்த நிலையில் வாக்குப்பதிவு... 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.60% ஓட்டுப்பதிவு..!

சுருக்கம்

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறைந்தபட்சமாக நெல்லையில் 50.05 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறைந்தபட்சமாக நெல்லையில் 50.05 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 50.05 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 தமிழகத்தில் இதுவரை பெரிதாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எங்கும் இல்லை. இவிஎம் பிரச்சினை எங்கும் இல்லை. வாக்குப்பதிவு சுமுகமாக நடக்கிறது. எம்.பி. ரவீந்திரநாத் கார் மீது தாக்குதல் குறித்து புகார் வந்துள்ளது. மாவட்ட அலுவலரிடம் தகவல் கேட்டுள்ளோம். 

மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் டோக்கன் அளித்து வாக்களிக்க வைப்போம். அதன் பின்னர் கடைசியில் கொரோனா பாதித்த வாக்காளர்களை வாக்களிக்க வைப்போம் என்றார்.

PREV
click me!

Recommended Stories

டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்
நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்