அதிமுக ஆட்சியில் 61 ஆயிரம் தான்... திமுக ஆட்சியில் 1.34 லட்சம்... செம்ம ஃபாஸ்ட்..!

By Thiraviaraj RMFirst Published Jul 2, 2021, 10:25 AM IST
Highlights

அதிமுக தடுப்பூசி குறித்து விமர்சிப்பது ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. செங்கல்பட்டில் எச்எல்எல் நிறுவனம் எங்குள்ளது என ஓபிஎஸுக்கு தெரியுமா?

செங்கல்பட்டில் எச்எல்எல் நிறுவனம் எங்குள்ளது என ஓ.பி.எஸுக்கு தெரியுமா? என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

பொது சுகாதாரத் துறை மற்றும் யுனிசெப் இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருவான்மியூரில் இன்று  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தமிழ்நாட்டில் 2ம் அலை முற்றுக்கு வருகிறது என்ற நிலை இருந்தாலும், மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துவது அரசின் கடமை, அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் 10 வாகனங்கள்  மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. 

கொரோனா பேரிடரால் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்தும் இதில் அறிவுறுத்தப்படும். தடுப்பூசி தான் கொரோனா தொற்றுக்கு ஒரே தீர்வு என்ற அடிப்படையில் அதுகுறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கொள்கிறோம். அதிமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு சரியாக 61 ஆயிரம் பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டது. திமுக ஆட்சியில்  நாள் ஒன்றுக்கு 1.34 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. அதிமுக தடுப்பூசி குறித்து விமர்சிப்பது ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. செங்கல்பட்டில் எச்எல்எல் நிறுவனம் எங்குள்ளது என ஓபிஎஸுக்கு தெரியுமா? 

தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற நான்கு மாவட்டங்களில் 10 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை கூடி உள்ளது. சிறிய அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படும், நானும் நேரில் சென்று ஆய்வு செய்வேன்” என அவர் தெரிவித்தார்.

click me!