3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இன்று அறிவிப்பு ! நண்பகல் 12 மணிக்கு வெளியிடுகிறார் தலைமை தேர்தல் ஆணையர்!!

 
Published : Jan 18, 2018, 09:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இன்று அறிவிப்பு ! நண்பகல் 12 மணிக்கு வெளியிடுகிறார் தலைமை தேர்தல் ஆணையர்!!

சுருக்கம்

3 states assembly electio date announce today

மேகாலயா, திரிபுரா மற்றும்  நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் இன்று  நண்பகல் 12 மணிக்கு அறிவிக்க உள்ளது.

கடந்த 2013 ம் ஆண்டு மார்ச் மாதம் 7 ம் தேதி பதவியேற்ற மேகாலயா சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதம் 6 ம் தேதியுடன் முடிவடைகிறது.

2013 ம் ஆண்டு மார்ச் 14 ம் தேதி பதவியேற்ற நாகாலாந்து சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதம் 13 ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதே போன்று 2013 ம் ஆண்டு மார்ச் 15 ம் தேதி பதவியேற்ற திரிபுரா மாநில சட்டசபையின் பதவி காலம் வரும் மார்ச் 14 ம் தேதியுடன் முடிவடைகிறது.

தலா 60 இடங்களைக் கொண்ட இந்த  3 மாநில சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைவதால், அதற்கு முன் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து 3 மாநிலங்களுக்கான  சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியிட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!