மனைவிக்கு பிரசவ வலி! சுகப்பிரசவத்திற்கு கணவன் என்ன செய்ய வேண்டும்?

Published : Sep 30, 2018, 03:24 PM ISTUpdated : Sep 30, 2018, 03:25 PM IST
மனைவிக்கு பிரசவ வலி! சுகப்பிரசவத்திற்கு கணவன் என்ன செய்ய வேண்டும்?

சுருக்கம்

கர்ப்பம் என்பது தவம் என்றும், பிரசவம் என்பது மறு பிறப்பு என்றும் கூறப்படுகிறது தவத்தில் பசி, பலவீனத்தைத் தவிர எதுவும் இல்லை ஆனால், கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிறு பிடிப்பது என பல கட்டங்களை கடந்து வர வேண்டும்.

கர்ப்பம் என்பது தவம் என்றும், பிரசவம் என்பது மறு பிறப்பு என்றும் கூறப்படுகிறது தவத்தில் பசி, பலவீனத்தைத் தவிர எதுவும் இல்லை ஆனால், கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிறு பிடிப்பது என பல கட்டங்களை கடந்து வர வேண்டும். 

பிரசவம் - மறு பிறப்பு 

பெண்களின் உடல் சதை கிழிந்து, எலும்புகள் பிளந்து தனக்குள் வளரும் உயிரை மண்ணுக்கு கொண்டு வருகின்றனர். 9 மாதங்கள் வலியை பொறுத்துக்கொண்ட் பெண்கள் பிரசவ வலியில் கதற வேண்டியிருக்கிறது. அப்போது ஆதரவாக இருக்க வேண்டியது கணவர்களின் கடமை.

முதல் கட்ட வலியின்போது பெண்கள் சற்று தைரியமாக தான் இருப்பார்கள். அந்த நேரத்தில் தைரியத்தை மேம்படுத்தும் பயப்படாதே, எதுவும் ஆகாது என்பது போன்ற கணவரின் ஆறுதல் மொழிகள் அவர்களுக்கு வலிமையை அளிக்கும்.

வலியின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் போது மனைவியின் கண்களை மூடிக்கொள்ளச்செய்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டுக் கொண்டும், தலையைக் கோதி விட்டுக்கொண்டும், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம், யாரைப் போல இருக்கும்  என கேள்விகளை எழுப்பி பிரசவ வலி மறந்துபோகும் அளவுக்கு பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

உச்ச கட்ட வலியின் போது மனைவிக்கு தைரியம் ஊட்டும் வகையில் குழந்தையின் தலை வெளி வந்துவிட்டது, இன்னும் இரண்டு - மூன்று நிமிடங்கள் தான் எல்லாம் முடிந்து விடும் எனக்கூறி தைரியப்ப்டுத்தலாம். உன்னுடன் நான் இருக்கிறேன், எதுவும் ஆகாது என்ற தைரியத்தை கணவன்மார்கள் கொடுத்தால், பெண்கள் ஒரு பிரசவம் என்ன? ஒன்பது பிரசவத்திற்கான வலியை கூட ஒரே நேரத்தில் தாங்குவர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்