கணவருக்கு பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா? இதப்படிங்க, தெரிஞ்சிகிங்க…

By vinoth kumarFirst Published Sep 30, 2018, 12:58 PM IST
Highlights

குழந்தைகள் பிறந்து குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் வரை அவர்கள் கட்டாயமாக குடித்து வளர வேண்டியது தாய்ப்பால் மட்டும் தான். முக்கியத்துவம் வாய்ந்த தாய்ப்பாலை கணவருக்கு கொடுப்பது நன்மையா தீமையா? 

குழந்தைகள் பிறந்து குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் வரை அவர்கள் கட்டாயமாக குடித்து வளர வேண்டியது தாய்ப்பால் மட்டும் தான். முக்கியத்துவம் வாய்ந்த தாய்ப்பாலை கணவருக்கு கொடுப்பது நன்மையா தீமையா? 

குழந்தைக்கு போதுமான அளவு பால் இருக்கும் போதும் ஆறு மாத வயதை தாண்டிய நிலையிலும் மேலும் பால் சுரப்பு இருந்தால் எப்போதாவது கணவருக்கு கொடுக்கலாம். கணவரின் உடலில் எந்த விதமான நோய் நொடிகளும், HIV போன்ற நோய்த் தொற்றுகளும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். நோய்த் தொற்றுகள் குழந்தைக்கும் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளன. 

குழந்தைக்கு போதுமான அளவு பால் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். குழந்தை மற்றும் தாயின் உடல் நிலை சரியில்லாத போதும், தாய்க்கும் குழந்தைக்கும் சரியான உறவு ஏற்படாத போதும் கணவருக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம். பெண்களுக்கு கணவருக்கு பால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமோ, ஆணிற்கு மனைவியின் பால் நிரம்பிய மார்பகங்களை பிடித்து ருசி பார்த்து விட வேண்டும் என்ற எண்ணமோ எழுவது இயற்கை தான். இதில் தவறு இல்லை அதை அடக்கி ஆள வேண்டியது ஆண்மையின் அடையாளம். 

கலவி உணர்வு தான் இதறு முழு காரணம் என்று கூற முடியாது. ஆனால், அதுதான் முதன்மையான காரணம் பால் சுரப்பு நிகழும் தருணத்தில் கலவி மேற்கொண்டால் கிடைக்கும் சுகம் எப்படி இருக்கும் என்று அறியும் விருப்பம்  தம்பதியருக்கு இயற்கையாவே தோன்றும். கருக்காலம் முதல் குழந்தை ஓரளவு வளரும் வரை மனைவி தன்னை கவனிப்பது இல்லை என தோன்றுவதை தவிர்க்க கணவருக்கு கொஞ்சமாக தாய்ப்பால் அளித்து மகிழ்ச்சிப்படுத்துவன் மூலம் மன்நிலையை மாற்ற உதவும்.

கணவருக்கு கொஞ்சம் மகிழ்ச்சியும், மனைவி உடலை இரசித்த சுகமும், தாய்ப்பாலை ருசி பார்த்த அனுபவமும் கிடைக்கும்; மனைவி என்பவள் இன்னொரு தாய் என்று உணர செய்யும். பெண்களை பார்க்கும் பொழுது மரியாதையை ஏற்படுத்தும்; தாய்ப்பாலை கணவருக்கு கொடுப்பது தவறானது அல்ல அதிகம் கொடுப்பது தான் தவறு. தாய்ப்பால் அதிகம் சுரக்க, மார்பகத்தில் உள்ள பால் தொடர்ந்து காலியாக வேண்டும். குழந்தை குடிக்காமல் இருந்தால் மார்பகத்தில் உள்ள பால் தேக்கத்தால் பால் சுரப்பு ஏற்படாது. அப்போடு கணவர் கொஞ்சமாக குடிப்பது பால் சுரப்புக்கு வழிவகுக்கும். பால் கட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். கணவரின் உடல் நலம் மேம்பட உதவும். 

தாய்ப்பாலை கணவருக்கு கொஞ்சமாக கொடுப்பது நல்லது தான். அதிகம் தாய்ப்பாலை கணவருக்கு கொடுப்பது கெடுதலை ஏற்படுத்தும். கணவரே குடித்து விட்டால், குழந்தைக்கு பற்றாக்குறை,  சத்துக்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குழந்தை அழும் நேரத்திலும் குழந்தையின் உடல் நலம் சரி இல்லாத போதும் கணவருக்கு கொடுக்கவேண்டாம்.

click me!