பேய்க்கு பயந்து இரவோடு இரவாக ஊரே காலி..! "துண்டக் காணோம் துணியக் காணோம்" என ஓட்டம் பிடித்த மக்கள்..!

 
Published : Oct 13, 2017, 03:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
பேய்க்கு பயந்து இரவோடு இரவாக ஊரே காலி..! "துண்டக் காணோம் துணியக் காணோம்" என ஓட்டம் பிடித்த மக்கள்..!

சுருக்கம்

village people shifted to another place due to devil

தெலுங்கானாவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள காசிகுடா என்ற  கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் 60 கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது.

கல் உடைக்கும் தொழிலை நம்பி வாழ்ந்து வந்த அந்த குடும்பங்கள் தற்போது பேய்கள் இருப்பதை நம்பி ஊரையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுள்ளனர்.

காசிகுடா கிராமத்தில் பெண் பேய்கள் அதிகம் இருப்பதாகவும், இந்த  பேய்கள் ஆண்களையே குறி வைத்து இரவு நேரத்தில் தாக்கி வருகிறது எனவும் பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கவே, பீதி அதிகமாகியது

அதற்கேற்றார் போல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சம்பவம் நடந்துள்ளதால், அந்த கிராமமே தேவை இல்லை என முடிவு செய்த ஒட்டுமொத்த கிராமக்கள் ஒன்றாக பேசி,முடிவு செய்து அந்த ஊரையே  காலி செய்துவிட்டு, வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக மிக அழகாக இருந்த அந்த குக்கிராமம், தற்போது பேய் கிராமமாக பேசப்பட்டு,அந்த கிராமம் பக்கம் யாரும் செல்லாத  நிலை ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை