ரயில் பயணிகள் கவனத்திற்கு .!!! 139 எண்ணுக்கு கால் பண்ணுங்க..!!! ஐ.ஆர்.சி.டி.சி சிறப்பு ஏற்பாடு...!!!
ரயில் நிலையத்தில், வாடகைக் கார்கள் மற்றும் வீல் சேர் வசதியை பெறுவதற்கு, 139 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது .
139 என்ற எண்ணில் தொடர்புகொண்டு , இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்வதற்கும், டிக்கெட்டிற்கான பணத்தை திரும்பப் பெறவும் பயன்படுத்தப் படுகிறது.
இந்நிலையில் கார்கள்,சுமை தூக்குவோர்,வீல் சேர் ஆகிய வசதிகளை பெறவும், இனி இந்த நம்பரையே பயன்படுத்தலாம் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது. .
தற்போது சோதனைக்காக , இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவிதுள்ளது குறிப்பிடத்தக்கது.