குரூப் 4 தேர்வு எழுத வேண்டுமா..? நாளையே கடைசி தேதி..!

By ezhil mozhiFirst Published Jul 13, 2019, 5:05 PM IST
Highlights

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப தேதி july 14ஆம் தேதி அதாவது நாளையுடன் முடிவடைகிறது என்பதால் இன்று பெரும்பாலானோர் அவசர அவசரமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

குரூப் 4 தேர்வு எழுத வேண்டுமா..? நாளையே கடைசி தேதி..! 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப தேதி july14ஆம் தேதி அதாவது நாளையுடன் முடிவடைகிறது என்பதால் இன்று பெரும்பாலானோர் அவசர அவசரமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான 6,491 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4  தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 14 ஆம் தேதி கடைசி என தெரிவித்திருந்த நிலையில், ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டது. 

இதனை அடுத்து 14 ஆம் தேதியான நாளை இரவு 12 மணியுடன் கால அவகாசம் முடிவடைய உள்ளதால் தேவைப்படுபவர்கள் விரைவாக விண்ணப்பிப்பது நல்லது. இதுவரை குரூப் 4 எழுதுவதற்காக 10 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசி தேதியாக ஜூலை 16 என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

click me!