தக்காளி விலை அதிரடி உயர்வு..!1 கிலோ ரூ.250 ..!

Published : Feb 25, 2019, 03:06 PM ISTUpdated : Feb 25, 2019, 03:11 PM IST
தக்காளி விலை அதிரடி உயர்வு..!1 கிலோ ரூ.250 ..!

சுருக்கம்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் தக்காளி விலை கிடு கிடு உயர்வை கண்டுள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் தக்காளி விலை கிடு கிடு உயர்வை கண்டுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி புல்வாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 44 வீரர்கள் பலியாயினர். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்த கண்டனங்கள் 
எழுந்தது. பின்னர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வந்த தக்காளியை முற்றிலுமாக நிறுத்தி விட்டனர் வியாபாரிகள்.

அதன் படி மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநில விவசாயிகள் தக்காளி ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி விட்டதால் பாகிஸ்தானில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து ஒரு கிலோ தக்காளி விலை 250 ரூபாயாக உயர்ந்தது.

பொதுவாக பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் இந்தியாவிலிருந்து தக்காளிகள் அனுப்பப்படும். ஆனால் தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டதால் பாகிஸ்தானில் தக்காளி விலையோ முற்றிலும் உயர்ந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல், மற்ற பிற பச்சை மிளகாய் ரூ.160 சிவப்பு மிளகாய் ரூ.300, இஞ்சி ரூ.150 , உருளைக்கிழங்கு ரூ.70 ,வெங்காயம் ரூ.90, கத்திரிக்காய், வெண்டைக்காய் மற்றும் சிம்லா மிளகாய் ரூ.110 கும் விற்பனையாகிறது.இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!