
இன்று (ஜூன் 6 ) இரவு 8 மணிக்கு செய்ய வேண்டிய மிக முக்கிய வழிபாடு...மீண்டும் கிடைக்காத நாள்.....8லட்சுமியும் குடியேறும் முக்கிய தினம்...
தேய்பிறை அஷ்டமி இன்று ...
சுவர்ண ஆகருஷ்ண வைரவருக்கு உகந்த நாள்
வாழ்வில் உள்ள தடைகள் குறைகள் நீங்கி செல்வ செழிப்போடு வாழ மிகவும் உகந்த நாள் இன்று...நாம் இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய மிக முக்கிய வழிபாடு பற்றி பார்க்கலாம்
பூசணிக்காய் வழிபாடு
மிகவும் உன்னதமான வழிபாடு....
மனிதன் உடலில், மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் தான் உள்ளது அதே போன்று பூசணிக்காயில் மூன்று மடங்கு நீர் உள்ளது.....
வைரவர் உள்ள கோவில்களில் சென்று செய்ய முடியாதவர்கள்..வீட்டில் அமர்ந்தபடியே வைரவருக்கு உகந்த மந்திரத்தை சொல்லலாம்....
மந்திரம்
"தனம் தரும் வைரவர் தளரடி பணிந்திடின்...தளர்வுகள் தீர்ந்து விடும்...மனம் திறந்தவன் பாதம்....மலரிட்டுவாழ்த்திடின்...மகிழ்வுகள் வந்து விடும்...சினம் தவிர் தன்மையும்...சின்மைய புன்னகை...சிந்தையுள் ஏற்றவனே....தனக்கில்லை ஈடு...யாருமே என்பால்..தனமழை பெய்துடுவான்...."
இரவு 8 மணிக்கு
இந்த சுவர்ண ஆகருஷ்ண அகஷ்டகத்தை....8 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்...
இன்று இரவு எட்டு மணிக்கு...8 முறை இந்த மந்திரத்தை தேய் பிறை அஸ்டமியான இன்று இதனை செய்யலாம்..இவ்வாறு இந்த மந்திரத்தை தேய்பிறை அஷ்டமியான இன்று சொல்லி வணங்கினால் 27 நட்சத்திரங்களையும் 12 ராசிகளையும், அஷ்ட லட்சுமியையும் வழிப்படுவதற்கு சமம் என்பது ஐதீகம்.
இந்த மந்திரத்தை வைரவருகாக இன்று செய்தால், அஷ்ட லட்சுமி 8 பேரும் இன்று அவருக்குள் குடி இருப்பார்கள் என்று ஐதீகமாம்....
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.